கசப்பான அந்த நாள்-III

எனது இதற்கு முந்தைய பதிவான பாடகர் அட்னன் சாமி பற்றிய பதிவு Youthful விகடனில் Good Blogs பகுதியில் வெளியாகி இருந்தது. அந்த பதிவை பார்க்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும். தொடர்ச்சியா டுபாக்கூர் பதிவுகளை நான் போடவில்லை என்பதை இதிலிருந்து நான் தெரிந்து கொண்டேன்.

அந்த இணையதளத்தின் Screen Shot கீழே உள்ள படத்தில்.....


இதன் முழுமையான பாகங்களுக்கு இங்கே கிளிக்குக 1  2   3   4

வீண் பில்டப்புகளைவிட்டு இன்றைய பதிவுக்கு வருகின்றேன். இது இதற்கு முன் வந்த இரண்டு பதிவுகளின் தொடர்ச்சி. முதல் பதிவுகளை பார்க்க விரும்புவோர் இங்கே 1 2 கிளிக் செய்து விரும்பினால் பார்க்கவும்.

நேரமும் வேகமாக சீறிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு Chief Student Counselor ஆக இருந்த Lecturer வந்து பாதுகாப்பாக எங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பஸ் வசதியை கம்பஸ் நிர்வாகம் செய்து தருவதை உறுதிப்படுத்தினார். இதன் மூலம் வெளியே நிலமை எவ்வாறு இருக்கின்றது உங்களால் ஊகிக்க முடிந்திருக்கும் பெயர்களை பதிவு செய்து கொண்டு நாங்களும் புறப்பட தயாராகினோம்.

என்ன ஆச்சரியம் என் பிரார்த்தனை வீண் போகவில்லை. அண்ணாவும் ஒருவாறு எங்களுடன் வந்து சேர்ந்திருந்தார். முன்வாசல் வழியாக பெரும்பான்மை இனத்தவர் போல நைஸாக கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொலிஸீற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கம்பஸிற்குள்ளே வந்திருந்தார். அதுவரை ஜடமாக இருந்த எனக்கு மீண்டும் உயிர் கிடைத்தது. என்றாலும் அந்த முயற்சி உயிரை பணயம் வைத்து செய்த முயற்சியாகும். ஏனெனில் அந்த தருணத்தில் முன்வாசல் வீதிக்கண்மையில் ஏகப்பட்ட காடையர்கள் தமிழர்களை எதிர்பார்த்து உலாவித்திரிந்தனர்.

பிற்பகல் 4.30 மணியளவில் எங்கள் (தமிழ் மாணவர்களின); தேசிய மற்றும் கம்பஸ் அடையாள அட்டைகள் துருவி துருவி பரிசோதிக்கப்பட்டபின்னர் பஸ்ஸினுள் ஏற்றப்பட்டோம். அவ்வேளை கம்பஸினுள் முன்னுள்ள ஓர் அறையில் தங்கியிருந்த எமது சக மாணவர்கள் சிலர் உள்ளே வரமுடியாமல் அங்கேயே சிக்கி இருந்தனர். அவர்களது அறையில் பொலிஸ் அந்தநேரம் சோதனை இட்டு கொண்டிருந்தது.



பஸ்வேறு புறப்பட தயாராகி அவர்களது வருகைக்காக நிறுத்திவைக்கப்படிருந்தது. எனினும் அவர்கள் தனியே கம்பஸிற்குள் வருவது பயங்கரமானதும் சாத்தியமற்றதாகவும் அந்த நேரத்தில் பட்டது. தொலைபேசி மூலம் ஏற்படுத்திய அழைப்புகளிற்கு உடனே வருகின்றோம் என்ற பதிலே வந்தது. சோதனை இடம்பெற்றுக்கொண்டிருந்தமையால் அவர்களால் வேறெதுவும் கூறமுடியாதிருந்தது.

அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு அவர்களை மீட்க துணிச்சலுடன் எம் சக நண்பன் ஒருவன் எங்களுடன் நின்ற பொலிஸின் உதவியை கேட்டு அவர்களுடன் ஜீப்பில் விரைந்து பத்திரமாக அவர்களை மீட்டு வந்தார்.

ஒருவாறு பஸ்ஸும் புறப்பட்டது. புறப்படும் வேளையில் 'இதுதான் எங்களுக்கு கம்பஸில் கடைசிநாள் ஒருக்காக கம்பஸை வடிவா பாத்திட்டு வாங்கடா' என்று சிரேஷ்ட மாணவர் ஒருவர் கூறினார். அவ்வேளையில் அது சரியாகவே இருக்கும்போல பட்டது.

பஸ்ஸும் கம்பஸ் வாயிலை கடக்கும் போது வீதியில் நின்றவர்கள் கோபமாக எங்களை பார்த்து கையைகாட்டி காட்டி பேசிக்கொண்டிருந்தனர். வெளிக்கிட்டு கொஞ்சநேரத்தில் 'டேய் எதாவது அனாமதேய பைகள் இருக்கா என்று பாருங்கடா!!' என்று பஸ்ஸில் நின்ற ஒருவர் குரல் எழுப்பினார். எல்லோரும் வடிவாக பார்த்து அவ்வாறு ஒன்றும் இல்லை என்பதை உறுதி செய்தோம். அந்த நேரத்தில் எவ்வாறெல்லாம் பயந்திருந்தோம் என்பதை இதன்மூலம் நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

யாராவது எங்களை கூண்டோடு அனுப்பி விடுவார்களோ என்றுகூட நாம் பயந்தோம். எதுஎவ்வாறெனினும் அனைவரும் பாதுகாப்பாக மாலை6 மணியளவில் வேண்டிய இடங்களில் இறக்கப்பட்டோம். அந்த பஸ்ஸின் பயணம் பம்பலப்பிட்டிவரைதான் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.



இதன்பிறகு நடந்த சில சுவாரஷ்யமான சம்பவங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம். இங்கே

2 comments:

யாழினி சொன்னது…

வாழ்த்துக்கள் கார்த்தி தங்களது பதிவு youthful விகடனில் வெளியானதையிட்டு.

மொறட்டுவ குண்டுவெடிப்பு சம்பவம் நானும் கேள்விப் பட்டதுண்டு. ஆனால் தங்களின் அந்த நேரடி அனுபவத்தை வாசிக்கும் போது எங்களுக்கும் "திக் திக்" காக தான் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்...

கார்த்தி சொன்னது…

வாழ்த்துக்களுக்கும் கருத்துக்கும் நன்றி யாழினி!!!
ஆமாம் மறக்கமுடியாத அனுபவம் அது

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்