SLPLன் வளர்ச்சி எதிர்காலம்

டிஸ்கி: யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கேடயம் சஞ்சிகையில் எழுதின பதிவு இங்கே.

இந்தியாவில் 2008ல் ஆரம்பிக்கப்பட்ட Indian Premier Leagueன் பாரிய வெற்றி பல நாடுகளிடையே இதே பாணியில் போட்டிகளை நடாத்தும் ஆசைக்கு வழி கோலியது. ஏற்கனவே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் உள்ளுர் போட்டிகள் நடைபெற்று Champions Leagueற்கு அணிகள் தெரிவாகின்ற வழமை இருந்த வருகின்ற போதிலும் IPLஐப் போலவே பெரும் எடுப்பில் வெளிநாட்டு வீரர்களையும் சோ்த்து ஒரு Cricket Carnival போல அந்த உள்ளுர் போட்டிகளை நடாத்தி பல விதங்களிலும் நன்மையை பெறவேண்டும் என்ற மனப்பாங்கு IPL வெற்றியின் பின்புதான் பல கிரிக்கெட் சபைகளிலும் உருவானதென்பது குறிப்பிடத்தக்கது.

இதன்பின்பே 2011-2012ல் அவுஸ்திரேலியாவில் Big Bash Leagueம், 2012ல் Bangladesh Premier Leagueம் 2012ல் Sri Lanka Premier Leagueம் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் முதல் SLPL, 2011ல் July19-August4 வரை நடாத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா உட்பட பல நாடுகளின் கிரிக்கெட்சபைகள் SLPLக்கு தங்களது நாட்டு வீரர்களை அனுப்புவதற்கு சம்மதித்தும் இருந்தார்கள். ஆனால் இந்தியா திடீரென முடிவை மாற்றி தங்கள் வீரர்களை SLPLல் விளையாட அனுமதிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார்கள். ஏற்கனவே சம்மதித்து விட்டு இந்திய கிரிக்கெட் சபை கடைசி நேரத்தில் காலை வாரியது பெரும் ஏமாற்றத்தையும் கவலையும் இலங்கை கிரிக்கெட் சபைக்கு ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு இந்திய கிரிக்கெட்சபை முதலில் கூறிய காரணம், SLPL போட்டிகளை வர்த்தகப்படுத்தும் ஒழுங்குபடுத்தும் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் சபையால் அங்கிகரிக்கப்பட்டு சிங்கப்பூரை தளமாக கொண்டு இயங்கும் Somerert Entertainment Ventures (SEV) நிறுவனத்திற்கு 5 வருடங்களிற்கு வழங்கப்பட்டிருந்தது. இவர்களினுாடாகவே SLPLல் விளையாடும் வீரர்களின் ஒப்பந்தமும் வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த வீரர்களின் ஒப்பந்தம் இலங்கை கிரிக்கெட்சபையால் வழங்காது போட்டியை நடாத்தும் நிறுவனத்தால் வழங்கப்படுவதை தாங்கள் விரும்பவில்லை என்று இந்திய கிரிக்கெட்சபை கூறியிருந்தனர். மேலும் IPL போட்டிகளில் வீரர்களின் ஒப்பந்தங்கள் BCCIயாலே வழங்கப்பட்டது என்றும் இவ்வாறு போட்டியை நடாத்தும் SEV நிறுவனம் இதை கையாள்வதால் வீரர்களின் பணக்கொடுக்கல் வாங்கல்களில் ஒரு முறைகேடுகள் நடைபெறலாம் எனவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லையென்றும் இந்திய கிரிக்கெட் சபை முகத்திலடித்தது போல கூறிவிட்டது. 

எனினும் SLC அவர்களை சமாதானப்படுத்தி இந்திய வீரர்களை உள்ளே எடுப்பதில் கடும்பிரயத்தனம் செய்திருந்தது. வீரர்களுக்கான ஒப்பந்தங்களில் குளறுபடி நடக்காது எனவும் SLC அதற்கு தாங்கள் பொறுப்பென்று உறுதிமொழி கொடுத்தும் கூட BCCI தங்கள் முடிவில் மாறாது இருந்தது. இந்திய கிரிக்கெட்சபை வீரர்களின் சம்பள விடயத்தில் பயந்தமைக்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. இந்தியாவில் இந்த போட்டிகளை ஒளிபரப்புவதற்கு அப்போது SLC ஒரு TV Channelஇடமும் உரிமையை விற்றிருக்கவில்லை. இலாபம் கொழிக்கும் இந்திய சந்தையில் இவர்களால் SLPLஐ வியாபாரப்படுத்த முடியாவிட்டால் SLCயால் இந்த போட்டி தொடரால் இலாபத்தை பெற்று வீரர்களுக்கு வழங்க முடியாமல் போகுமென்று இந்தியா கிரிக்கெட்சபை பயந்தது என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் உண்மையில் இந்தியா வீரர்களை அனுப்பாமைக்கான இன்னொரு காரணமும இருந்ததது. SLPLஐ பின் நின்று நடத்துபவர் பழைய IPLன் பொறுப்பாளரும் பின்னர் BCCIயுடன் முரண்பட்டு குற்றம் சாட்டப்பட்டவருமான லலித் மோடிதான் என இந்தியா சந்தேகித்தது. லலித் மோடிக்கும் போட்டித்தொடரை நடாத்தும்  Somerert Entertainment Ventures(SEV)க்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக BCCI குற்றம் சாட்டியது. அதற்கு SLCயும் SEVம் உடனேயே மறுப்புத்தெரிவித்திருந்தது. மேலும் SEV, லலித்மோடி பங்குதாரராகவோ இணைப்பாளராகவோ தற்போதோ கடந்த காலத்திலேயோ  தங்கள் நிறுவனத்துடன் இருக்கவில்லை என்று கூறியிருந்தது. அதோடு SLCயுடன் தங்கள் நிறுவனம் சேர்ந்து நடாத்தும் எந்த போட்டிகளிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ லலித்மோடிக்கு சம்பந்தம் இல்லை என்று உறுதிபட தெரிவித்திருந்தது. ஆனாலும் அதன்பின்பும் இந்தியாவின் முடிவில் மாற்றம் இருக்கவில்லை.

இப்படியாக பல பிரச்சனைகளை எதிர்கொண்ட SLC முதலாவது SLPLஐ 2011 Julyல் நடாத்தும் முடிவை கைவிட்டு 2012 Augustல் நடாத்துவதாக முடிவெடுத்தது. ஒளிபரப்பும் உரிமையை ESPN STAR Sports 2012 July அளவில் பெற்றுக்கொண்டது. Bangladesh, Bhutan, Cambodia, Hong Kong, Indonesia, Korea, Nepal, Macau, Malaysia, Maldives, Pakistan, Papua New Guinea, Philippines, Singapore, Sri Lanka மற்றும் Thailand போன்ற நாடுகளில் ஒளிபரப்பும் உரிமையை இவர்கள் வைத்திருக்கிறார்கள்.  ஒரு பெரிய்ய விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனத்திடம் SLPLன் உரிமை சென்றது பணவிடயத்திலும் SLPLன் பிரபலப்படுத்தலிலும் ஆரோக்கியமான விடயம் என்றே சொல்லலாம். பல குத்தல்கள் குடையல்களுடன் தொடங்கப்பட்டாலும் ஒரு மாதிரி 2012ல் இலங்கை கிரிக்கெற் இந்த போட்டி தொடரை நடாத்தி முடித்துவிட்டது. 

நடந்து முடிந்த முதலாவது SLPLல் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே நடைபெற்று முடிந்தது. தொடங்கும்போது பல தரப்பிலும் காணப்பட்ட குறைந்தமட்டத்திலான எதிர்பார்ப்பு இந்த முதலாவது SLPLஐ ஒருவாறு கரையேற்றிவிட்டது. வீரர்களுக்கும் இலங்கை கிரிக்கெட்சபைக்கும் வருவாயை ஈட்டுக்கொடுத்தாலும் அணிகளின் உரிமையாளர்களுக்கு நட்டத்தையே விட்டுச்சென்றிருக்கிறது. போட்டியை நேரே சென்று பார்த்த பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த போட்டிக்கான எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. கண்டியில் நடைபெற்ற போட்டிகளையும் கொழும்பில் நடைபெற்ற போட்டிகள் ஒன்ரிரண்டையும் தவிர மிகுதி அனைத்து போட்டிகளிலும் பார்வையாளர்கள் இல்லை என்று கூறுமளவுக்கு வெகு சொற்பமான அளவு ரசிகர்களே வந்திருந்தனர். பல போட்டிகளுக்கு இலவச ரிக்கெட்கள் வழங்கப்பட்டபோதும் ரசிகர்களை சராசரி அளவில் கூட மைதானத்திற்கு கொண்டுவர இந்தப்போட்டிகளால் முடியவில்லை. இலங்கையில் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்த்தோர்கூட வெகு சொற்பமே.

மொத்தமாக 7அணிகள் கலந்து கொண்டு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. இதில் வட மாகாணத்தை UTHURA RUDRASம் கிழக்கு மாகாணத்தை NAGENNAHIRA NAGASம் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. தமிழ் வீரர்களுக்கு இலங்கை அணயில் வாய்ப்பளிக்கப்படும் என்று ஆங்காங்கே கூறிவரும் அமைச்சர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை சேர்ந்தவர்கள் இந்த SLPL போட்டிகளில் வடக்கு கிழக்கிலிருந்து ஒரு உள்ளுர் தமிழ் வீரரையும் சேர்க்கவில்லை. இந்த போட்டிகளில் விளையாடிய பல வீரர்கள் ஒழுங்காக பிடிகளை கூட எடுக்காமல் சொதப்பியதோடு ஒப்பிடும்போது என்ன அடிப்படையில் ஒரு வடக்கு கிழக்கு வீரர் கூட இவர்களின் கண்களுக்கு படவில்லை. வடக்கு கிழக்கில் பல கிரிக்கெட் கழகங்கள் இப்படியான T20 போட்டிகளில் உள்ளுரில் விளையாடிவரும் நிலையில் பல திறமையான வீரர்கள் இருக்கின்ற நிலையில் இவர்களுக்கான வாய்ப்பு இப்படியான ஒரு முதல் தர கிரிக்கெற் போட்டிகளிலேயே வழங்கப்படாது விட்டது, இலங்கை அணியில் வடக்கு கிழக்கு வீரர்கள் எதிர்காலத்தில் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பை முற்றிலும் கேள்விக்குரியதாக்கியுள்ளது. 

எனினும் இந்த போட்டி தொடரினூடாக எதிர்கால இலங்கை அணிக்கு வரக்கூடிய பல திறமைகள் கண்டறியப்பட்டுள்ளமை இந்தப்போட்டித்தொடரின் வெற்றியும் வீரர்களுக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமும் ஆகும். முதற்கட்டமாகவே இந்த SLPLலிலிருந்து இரு வீரர்கள் உலககிண்ண T20 இலங்கை அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். துடுப்பாட்ட வீரர் டில்சான் முனவீரவும் பந்துவீச்சாளர் அகில தனன்சயவுமே அவர்கள்.

டில்ஷான் முனவீர & அகில தனஞ்சய


டிஸ்கி: ஒரு சஞ்சிகைக்காக SLPL + இந்த திறமையான வீரர்களை சேர்த்து எழுதியிருந்த பகுதி மிக நீண்டுவிட்டதால் இந்த வீரர்களின் பகுதியை வெட்டி இங்கே பதிகிறேன். SLPL தொடர்பான அந்த பதிவு பொட்டலத்தில் பிறகு பதிவேற்றப்படும்

Dilshan Munaweera

23வயதே ஆகும் இந்த வீரர் நடந்து முடிந்த SLPL தொடரில் கூடிய மொத்த ஓட்டங்களை குவித்தவீரராக இருக்கிறார். மத்தியுஸை விட ஒரு ஓட்டம் கூட எடுத்து 212ஓட்டங்களை இந்த போட்டி தொடரில் பெற்றிருக்கிறார். வலதுகை ஆரம்ப துடுப்பாட்ட வீரரான இவர் அதிரடியாக ஆடக்கூடியவர். இலங்கை 19, 21 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியிருக்கிறார். SLPL முழுவதும் திறமையாக விளையாடிய இவர் இறுதிப்போட்டியில் மத்தியுஸின்  NAGENNAHIRA NAGASவுடன் ஆட்டமிழக்காமல் வெறும் 23 பந்துகளில் பெற்ற 44ஓட்டங்கள் வெற்றியை டக்வத் லூயிஸ் முறை மூலமாக இவரது Uva Next அணிக்கு வழங்கியிருந்தது.


ஹெல்மெற்றுடன் இவர் துடுப்பை அந்தரத்தில் வைத்து பிடித்தபடியே துடுப்பெடுத்தாடும் அழகும் இவரது முகவெட்டும் மேற்கிந்திய தீவுகளின் வீரர் ராம்நரேஷ் சர்வேனை பார்ப்பது போல ஓர் உணர்வை தருகிறது. அதிரடி வீரராக இருந்த போதிலும் Stylish ஆக அடித்து பந்துகளை Gapகளினூடாக placeசெய்யும் திறமை இவரை எதிர்காலத்திற்கான இலங்கை அணியில் நிரந்தர இடத்தை வழங்கும் என்பது எதிர்பார்ப்பு. 7போட்டிகளில் 212ஓட்டங்களை 35என்ற சராசரியுடனும் 144ஓட்டவிகிதத்தில் இவர் SLPLல் பெற்றிருந்தார். T20 போட்டிகளில் இலங்கை சார்பாக டில்ஷானுடன் களமிறங்குவதற்கு பொருத்தமான ஆரம்ப துடுப்பாட்ட வீரரை சரியாக தேர்ந்தெடுக்க முடியாமல் மஹேல ஜெயவர்ததனவே பெரும்பாலும் அந்தப்பணியியை செய்து வந்திருந்தாலும் இந்த உலககிண்ண போட்டிகளில் டில்ஷான் முனவீர அந்தப்பணியை செவ்வனே செய்வார் என இலங்கை கிரிக்கெற் சபை எதிர்பாக்கின்றது. நான் எழுதும்வரை (Sep15) இலங்கை விளையாடிய மேற்கிந்தியதீவுகள் இந்திய அணிகளிற்கிடையான Warm-up போட்டியில் இவர் முறையே 24, 03 ஒட்டங்களை பெற்றிருந்தார். 


Akila Dananjaya

வெறும் 18வயதுடைய SLPLஐ தவிர வேற முதல்தரப்போட்டிகளிலேயே கலந்து கொள்ளாத இவர் தற்போது T20 உலககிண்ண இலங்கை அணியில். இவர் திடீரென வயம்ப அணிக்காக SLPLல் சேர்த்துக்கொள்ளப்பட்ட போது பல சலசலப்புகள் எழுந்திருந்தன. இரண்டு கேள்விகள் பொதுவாக இவர் தொடர்பாக சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஒன்று, முதல்தரப்போட்டிகளிலேயே விளையாடாத இவர் எவ்வாறு இந்தப்பெரிய்ய போட்டிக்கான அணியில் வந்தார். இரண்டாவது திறமையானவர் எனின் ஏன் அப்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செல்லவில்லை. இந்தக்குழப்பங்கள் ஆரம்ப்பத்தில் பலருக்கும் இருந்தாலும் பின்னர் அனைத்தும் தெளிவாக்கப்ட்டது.

பாகிஸ்தான் அணி இலங்கையில் Juneல் மேற்கொண்ட சுற்றுலாவில் இலங்கைக்கு மரண பயத்தை கொடுக்க கூடியவர் என பாகிஸ்தானின் சுழல்பந்துவீச்சாளர் சயிட்அஜ்மால் இனங்காணப்பட்டிருந்தார். அஜ்மாலின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வதற்காக அவர் மாதிரி பந்துவீசக்கூடியவர்களை இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து அழைத்து இலங்கை அணியின் பயிற்சிகளின் போது பந்துவீச சொல்லியிருந்தார்கள் அங்கே இவரது பற்துவீச்சு இலங்கை அணி தலைவர் மஹேலஜெயவர்த்தனவிற்கும் சங்கக்காரவிற்கும் எதிர்கொள்ள சற்று கடினமாக இருந்ததாக கூறப்பட்டது. பயிற்சிகளின்போது இவரது சிறப்பான பெறுபேற்றை பார்த்து இவர் மஹேலவினால் வயம்ப அணிக்கு அழைத்துவரப்பட்டார். இலங்கைக்காக 19வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவுஸ்திரேலியா செல்வதிலும் இங்கே தனது அணியில் SLPLல் விளையாடுவதில் மஹேல விரும்பியதனாலேயே அகில தனன்சய வயம்ப அணிக்காக விளையாடினார் என்று சொல்லப்படுகிறது.

பணபலத்தாலும் அரசியல் செல்வாக்காலும் உள்ளே நுழைந்தார் என்று சிலரால் சந்தேகிக்கப்ட இவர் SLPLல் விளையாடிய போட்டிகளில் காட்டிய திறமையின் பின்னர் தன்னை சந்தேகித்தோரை வாயடைக்கச் செய்தார். பல விதமான பந்துவீச்சு வகைகளை வீசக்கூடியவரான இந்த வலது கை சுழல் பந்துவீச்சாளர் போட்டியின் நிலைகளை கருத்தில் கொண்டு தந்திரமாகவும் பந்துவீசக்கூடியவராக இருப்பது இவரின் மிகப்பலமாக கருதப்படுகிறது. SLPL தொடர் முழுவதும் சிறப்பாக பிரகாசித்த இவர் றுகுண றோயல்ஸ் அணியுடனா போட்டி தவர்த்து (இதில் 3ஓவர்களில் 37ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்) அனைத்து போட்டிகளில் சொற்ப ஓட்டங்களையே விட்டுக்கொடுத்து எதிரணியை கட்டுப்படுத்தியுமிருந்தார். 6 போட்டிகளில் 9 விக்கெட்களை சரித்த இவர் வெறும் 6.36 என்ற ஓட்டவீதத்திலேயே ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

இலங்கையின் Mystery பந்துவீச்சாளரென முன்பு அறியப்பட்ட அஜந்த மெண்டிஸ் போலவே இவரையும் பலர் கருதுகின்றபோதிலும் மிகச்சிறிய வயதில் சர்வதேச போட்டியில் அதுவும் உலக T20 போட்டிகளில் இவரால் சாதிக்கமுடியுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது. திறமையான வீரர் என்பதில் சந்தேகம் இல்லை என்கிறபோதிலும் சர்வதேச போட்டி அனுபவம் ஒன்று கூட இல்லாமல் முக்கிய போட்டியில் கழமிறங்குவது கொஞ்சம் கடினமான விடயம்தான். அத்தோடு இவர் இந்த முக்கிய போட்டியில் சொதப்புமிடத்து இவரது எதிர்காலத்துக்கு அது ஒரு பிழையான அடித்தளமாக கூட அமைந்துவிடலாம். மிகச்சிறிய வயதில் இவரை சர்வதேச போட்டிகளின் அனுபவம் வழங்காது இவரை பாழாக்கிவிடப்போகிறார்களோ தெரியவில்லை. இலங்கை மேற்கிந்தியதீவுகளிடையேயான முதலாவது Warm-up போட்டியில் 3ஓவர்களில் 17ஓட்டங்களை கொடுத்திருந்தார் இவர். இந்தியாவுடனான 2வது போட்டியில் இவர் விளையாடவில்லை. ஒரு காலப்பகுதியில் தனது மாயப்பந்து வீச்சுக்களால் பலரையும் வீழ்த்திய அஜந்த மெண்டிஸிற்க்கு பிற் காலத்தில் நடந்தது போல இவருக்கும் நடக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

திரைதகவல் பெட்டகம்-X (Singers VandanaSrinivasan& SathyaPrakash)

September 01 ஏகப்பட்டரோரினது எதிர்பார்ப்புகளுடன் ”நீதானே என் பொன்வசந்தம்” பாடல்கள் வெளிவந்திருந்தன. இந்தப்பாடல்கள் தொடர்பில் பலதரப்பட்ட Mixed comments வந்துகொண்டிருக்கின்றன. என்னை பொறுத்தவரை   பாடல்கள் எல்லாம் நல்லா இருந்திச்சு ஆன அல்பம் வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா போல மக்சிமம் என்று சொல்கிறள அளவு இருக்கல. ஆனா சிலர் ”ராஜாவா இப்பிடி போட்டார்” என்று தாறுமாறாக கேவலப்படுத்துகிற அளவில் இல்லவே இல்லை. இவர்கள் அண்மையில் இளையராஜா போட்ட வேறு படபாடல்களை கேட்டார்களோ தெரியல. இளையாராஜாவின் அண்மைக்கால அல்பங்களுடன் ஒப்பிடும்போது இது சுப்பர் ரகம் எனலாம்.


அண்மையில் வந்த பட பாடல்களில் தாண்டவம் பாடல்கள்தான் எனக்கு இனிமையில் முன்னிலையில் இருப்பது போல தெரிகிறது. இயக்குனர் AL.விஜய்யும் இசையமைப்பாளர் GV.பிரகாஸ்ஸும் இணையும் 4 வது தடவை இது. ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரிய்ய வெற்றிகளை பெற்றிருந்தன. அதைப்போலவே எதிர்பார்ப்பை குலைக்காமல் தாண்டவம் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்திருக்கின்றன.
  
GV PrakashKumar&Saindhavi
இதுவரை காலம் வந்த GV.பிரகாஸ்குமாரின் அல்பங்களில் இதில்தான் இவர் கூடுதலான பாடல்களை பாடியுள்ளார். மொத்தமாக 3 பாடல்கள். முதலாவது ”அதிகாலை பூக்கள்” என்று தொடங்கும் Jingle வகையறா ஒரு நிமிட பாடல். அடுத்தது ”அனிச்சம் பூவழகி” என்ற பாடல் இதில் சின்னப்பொண்ணு வேல்முருகன் சைந்தவியுடன் சேர்ந்து பாடியிருக்கிறார். கிராமப்புற பாடல்களுக்கு பிரபலமான சின்னப்பொண்ணு GV.Prakashன் இசையில் இணையும் முதல் தடவை இது. Typical சின்னப்பொண்ணுவின் பாடல்களிலிருக்கும் குரலுக்கும் இந்தபாடலில்  உள்ள குரலுக்கும் நல்ல வித்தியாசம் தெரிகிறது. வித்தியாசமான குரலை சின்னப்பொண்ணுவிடம் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் GV.

Sathya Prakash
மூன்றாவது பாடல் ”உயிரின் உயிரே உனது” பாடல். இதில் சைந்தவியின் குரலே பெரும்பாலான நேரத்தில் பயன்பட்டாலும் ஸ்வரப்பிரயோகங்களில் VijayTV Super Singer புகழ் சத்தியப்பிரகாஸ் உடன் சேர்ந்து GV.Prakashம் பாடியிருந்தார். ”பநிஸரீ கஸரிரி மோனம் பநிஸரீ கரிஸாஸரி“ என்ற ஸ்வரப்பிரயோகத்தில் இருவரின் குரலும் சேர்ந்தொலிப்பதை அவதானித்து பாருங்கள். ஜதிப்பிரயோகங்களில் சத்திய பிராகாஸின் குரல்தான் தனித்து ஒலிக்கிறது. ”3” திரைப்படத்தின் Remix பாடல் ”போ நீ போ” பாடலுக்கு பின்பு சத்திய பிரகாஸிற்கு GV மூலமாக இன்னோர் வாயப்பு கிடைத்திருக்கிறது.

Vandana Srinivasan

ஆனால் இந்த அல்பத்தின் மூலம் முக்கியமாக பிரபலமாகப்போகிறவர் பாடகி வந்தனா ஸ்ரீநிவாசன். இதற்கு முன் ”பாலை” என்று இளையவர்கள் எல்லாம் அறிமுகமான படத்தில் ”யாதோ யாதோ ஏதொ நடந்தது” என்ற பாடலை பாடியிருந்தார் இவர்.  இந்த வந்தனா ஸ்ரீநிவாசன் பல Albumகள் தயாரிக்கும் இசையமைப்பாளர்களுக்கு Mashup பாடல்கள் + வழமையான பாடல்களை பாடிவருகின்றவர். Mashup என்பது ஏலவே இருக்கும் பாடல்களை இணைத்து உருவாக்கும் பாடல்களாம். இப்படியான பாடல்களை உருவாக்குவதில் இந்தியாவில் பிரபலமாக இருக்கும் வெளிநாட்டு இசையமைப்பாளர் Shankar Tuckerன் இசையிலும் இவர் ”துளி துளியாய்” என்ற பாடலை பாடியிருக்கிறார்.

தாண்டவம் பட வந்தனாவின் பாடல் கீழே....


தாண்டவம் படத்தில் வந்தனா ஸ்ரீநிவாசன் ”ஒரு பாதி கதவு நீயடி” என்ற பாடலை ஹரிசரனுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் அந்தமாதிரி மெலடியாக இருக்கிறது. இவரின் குரல் கேட்பதற்கு பாடகி சின்மயியின் குரல் போலவே இருக்கிறது. பல வாய்ப்புக்கள் இவருக்கு இனி கிடைக்க போவது தெரிகிறது. (அலாப்ராஜுக்கு இவ்வாறு அவரின் ஆரம்ப பாடல்களின் போதே திரைதகவல் பெட்டகம்-III ல் சொல்லியிருந்தோம். இப்போது அவரின் வாய்ப்புக்கள் அனைவரும் அறிந்ததே.) இந்தப்பாடலில் ஹரிசரன் ”நீயென்பதே நான்தானடி நான் என்பதே நாம் தானடி” என்று இழுக்கும் அந்த இழுவைதான் பாட்டின் ஹைலைட். இப்போது இருக்கும் இளமையான பாடகர்களில் ஹரிசரனுக்குதான் எனது முதலிடம்.

Vandana Srinivasan's Rahman Mash Up - Hindi ( Prithvi Chandrasekhar feat)

 


 வந்தனா ஸ்ரீநிவாசனின் சில  பாடல்கள் + Mashups links

 Thuli Thuliyaai" - Shankar Tucker ft. http://www.youtube.com/watch?v=uTnla1nAfI8
Rahman Mashup - Tamil - Prithvi Chandrasekhar feat.  http://www.youtube.com/watch?v=DhNRNS3UPnU&feature=relmfu

முகமூடி (மூடியமுகமாகவே) - திரைப்பார்வை

என்னதான் மற்றவர்களை கணக்கெடுக்காமல் ஓவராக தாறுமாறாக பேசினாலும் சிலரிடம் இருக்கு மதிப்பு குறைவதில்லை. அதுபோலதான் இயக்குனர் மிஸ்கினிடம் ஒரு எதிர்பார்ப்பு கலந்த மதிப்பு சினிமா ரசிகர்களிடயே இருந்து வருகிறது. சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம்செய் என்று இவரால் வந்த படைப்புக்கள் வித்தியாசமானவை இவரது தனி முத்திரையை வெளிப்படுத்தியவை. இவரது முதல் 2படங்களும் சூப்பர்ஹிட்டாகவும் நந்தலாலா பெரிதாக சோபிக்காமலும் (பலதரப்பாலும் பெரிதாக பாராட்டப்பட்டாலும்) யுத்தம்செய் முதலுக்கு மோசமில்லாது நன்றாகவும் போயிருந்தது.


உலகசினிமாவை உல்டா பண்ணுகிறார் (நந்தலால படத்திற்கே முக்கியமாக எழுந்தது) என்று ஆங்காங்கே கூச்சல்கள் எழுந்தாலும் திரையுலகில் இவரது பயணம் உறுதியாக முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இயக்குனராக வசனகர்த்தாவாக பாடகராக நடிகராக என்று பல அவதாரங்கள் அனைத்திலும் கலக்கி இருந்தவர்தான் இந்த மிஸ்கின். 

தனது கனவுப்படம் (Dream Movie) என்றும் தமிழ் சினிமாவில் முதலாவது Super Hero Filmஎன்றும் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்ட படம்தான் இந்த முகமூடி. தனது முதல் இரு படங்களுக்கும் இசைக்காக சுந்தர்.C.பாபுவையும் அறிமுகப்படுத்தி பயன்படுத்திய இவர் நந்தலாலாவுக்கு இளையராஜாவையும் இறுதியாக யுத்தம் செய்யிற்கு புதுமுகமாக இசையமைப்பாளர் Kயையும் அறிமுகப்படுத்தியிருந்தார். மிஸ்கினின் படங்களில் பாடல்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்திலும் பின்னணி இசைக்கு தனியொரு முக்கியத்துவம் கிடைப்பது வழமை. எனினும் நந்தலாலா தவிர்த்து சித்திரம்பேசுதடியிலிருந்து  ஒவ்வொரு படத்திலும் டப்பாங்கூத்து பாடல் ஒன்று வந்து அந்தவருடத்தின் சூப்பர்ஹிட் என்கிற அளவுக்கு அது வெற்றியும்பெற்று வந்துள்ளது. யுத்தம்செய்யில் ஒரு பாடலிலும் கலக்கலான பின்னணி இசையினுாடாகவும் அறியப்பட்ட Kயையே மீண்டும் முகமூடிக்கும் கழமிறக்கியிருந்தார் மிஸ்கின்.


படம் எப்பிடி என்கிற கேள்விக்கு முதல் ஏன் இதை மிஸ்கின் தமிழின் முதலாவது Super Hero படமெண்டு சொன்னார் என்கிறது புரியாத புதிராகவே இருக்கிறது. எனக்கு தெரிந்தவரை ஆங்கில படங்களில் வருகின்றதுபோல ஆச்சர்ய அமானுச சக்திகளை கொண்ட ஹீரோவைப்பற்றிய கதைகளே Super Hero படங்களில் உள்ளடங்கும். இந்தப்படத்திலேயே நரேன் அடிக்கடி சொன்ன படப்பெயர்களான SuperMan SpiderMan IronMan போன்ற படங்கள். ஆனால் தமிழ் சினிமாவில் வந்த கந்தசாமி வேலாயுதம் படங்களை யாரும் அந்த Categoryக்குள் போடுவார்களா? அப்பிடி போடப்பட்ட படம்தான் இந்த முகமூடியும். Atleast ஜித்தன் படத்தில் வந்த மாதிரியேனும் ஒரு அற்புதசக்திகூட ஹீரோவுக்கு இல்லை. ஆனால் சில சகாசங்களை செய்கிறார் ஹீரோ. தமிழ்சினிமாவில் அமானுச சக்திகள் கொண்ட ஹீரோக்கள் வருவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் லாஜிக் இல்லை என்பார்கள் என்பதால்தான் இப்பிடி என்றால் சும்மா ஒரு மனிதர் வெவ்வேறு இடங்களுக்கெல்லாம் கணப்பொழுதில் போகும் லாஜிக்கை என்னவென்று சொல்வது. ஒரு திறமையான இயக்குனர் இப்பிடி எதையோசித்து செய்தார் என்பது புரியாத புதிர்தான்.



படம் முதல்பாதியில் மிஸ்கினின் அரசாட்சி என்று சொல்லும்படியாக அவரது வழமையான பாணியில் சுவாரஸ்யமாக வேகமாக நேரம்போவதே தெரியாமல் போகின்றது. குடும்பம், அடிதடிஅக்சன், காதல், மர்மமனிதர்கள்  திரில் என்று அற்புதமாக பிணைக்கப்ட்டு அனைத்து காட்சிகளும் நேர்த்தியாக சென்றிருந்தது. ஆனால் இரண்டாம்பதியோ  எடுத்துக்கொண்ட Story Concept சொதப்பலால் முதல் பாதியின் வேலைகளை மறக்கசெய்யக்கூடியவாறு சும்மா ஏனோதானோவென்று சென்றுவிட்டது. சொல்ல வந்த கதையின் வினைதான் அது. மிஸ்கின் எடுத்துக்கொண்ட கதை படத்தை சுவாரஸ்யமாக 2வது பாதியில் கொண்டு செல்லவிடவேயில்லை. இந்த கதையைகொண்டு படத்தை சுவாரஸ்யமாக ஆக்கியும் இருக்கேலாது. மிஸ்கினும் சொதப்ப தொடங்கி விட்டார் என்று 2வது பாதியில் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். படம் மொக்கை விசர் கேவலம் என்று சொல்லவில்லை. ஆனால் படம் வாய்க்கவில்லை ”பார்க்கலாம் ரகம்” என்பதனுள்தான் இந்த 2வது பாதி சொதப்பாலால் சொல்லலாம்.

சண்டைக்காட்சிகள் நன்றாக இருந்தாலும் சூப்பர்ஹீரோ Subject என்று சொன்ன பில்டப்பிற்கு ஏற்றவாறு பெரிதாக சண்டைக்காட்சிகள் இருக்கவில்லை. ஜீவா கொடுத்தவேலையை அழகாக செய்திருக்கிறார். வழமையான அவரின் அலட்டலில்லாத அளவான நடிப்புடன் அழகாகவும் தெரிகிறார். (நீதானே என்பொன்வசந்தத்தின் பாதிப்போ  தெரியவில்லை). அறிமுக ஹீரொயின் பூஜா கெஹ்டேயிற்கு பெரிதாக காட்சிகள் இல்லை. நடிப்பையும் கணிக்க முடியவில்லை. நரேனிற்கு இறுதி காட்சிகள் தவிர பெரிதாக பேசுவதற்குரிய காட்சிகள் இல்லை. எனினும் நரேன் காட்சிகளில் எதிர்பார்த்தளவு மிரட்டவில்லை.

படத்தின் அல்பத்தில் மொத்தம் 3 பாடலகள் என்றாலும் சின்மயி பாடிய ”மாயாவி” பாடல் படத்தில் இடம்பெறவில்லை. அதன் ஆரம்ப beatகள் இடையிடையே பயன்பட்டாலும் முக்கியமாக படம் நிறையும் தருவாயில் அந்த ஆரம்ப இசையை மட்டும் போட்டார்கள் பாட்டை கடைசிவரை காட்டவேயில்லை. மிஸ்கின் பாடிய ”நாட்டில நம்ம வீட்டில” பாடல் மெட்டு வேறு அதே மாதிரி பாடல்களை ஞாபகப்படுத்தினாலும் அந்த டப்பாங்கூத்து பாடல் எடுக்கப்பட்ட விதமும் பாடலும் நன்றாக இருந்தது. பெரிதாக ரசிக்கப்பட்ட ”வாய மூடி சும்மா இருடா” பாடல் வெளிநாட்டில் எடுக்கப்பட்டிருந்தது நன்றாக Visualsம் வந்திருந்தது.

யுத்தம்செய் போலவே படத்தின் பின்னணி இசை படத்தின் ஊன்றுகோல். அதிரடியான கலக்கல் இசையை வழங்கியிருந்த இசையமைப்பாளர் K இன்னும் யுத்தம்செய் பாதிப்பிலிருந்து மீளவில்லை என்பது பின்னணி இசையிலும் ”வாய மூடி சும்மா இருடா” பாடல் இசையிலும் தெளிவாகியிருந்தது. ”யுத்தம்செய்”இல் மர்மமான இடங்களில் பெரும்பாலும் போடப்பட்ட அந்த இசை மீண்டும் இங்கேயும் பெரிதாக தலை காட்டியிருந்தது. என்றாலும் பல இடங்களில் Kயின் பின்னணி இசைதான் படத்தின் ஹைலட்டே.

பெரிதாக எதிர்பார்க்கபட்ட முகமூடி கடைசிவரை மூடியமுகமாகவே சென்றது ரசிகர்களுக்கு பெரிய்ய ஏமாற்றம்தான். முதல்முறையாக மிஸ்கினில் தடுமாற்றத்தை இந்தப்படத்தில் உணர்ந்தேன்.

HarrisJeyarajhக்கு ஆதரவாக ஒரு குரல் (திரைதகவல் பெட்டகம்-IX)

தொடக்க டிஸ்கி: ஹாரிஸ்ஜெயராஜ்க்கு முழுதாக ஆதரவு குரல் கொடுக்கவே இந்த பதிவு. மற்ற இசையமைப்பாளர்களை குறைசொல்லவோ கலாய்க்கவோ இல்லை.ஹாரிஸின் எதிர்ப்பாளரென்றால் வாசிக்க முதலே Close பண்ணிடுங்க.  

பெரும்பாலும் 2006க்கு பிறகு வந்த ஹாரிஸின் அல்பங்கள் ஹிட் ஆகிறதோ இல்லையோ பெரும்பாலும் எல்லாத்தரப்பிலும் பலத்த குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்கிறது. பெரும்பாலும் இந்த குற்றச்சாட்டுக்கள் இரண்டு வகைக்குள்ளேயே அடங்கி விடுகிறது. 1-->இவர் வேறு மொழி பாடல்களை லாவகமா ஆட்டய போட்டு தனது பாட்டுக்களை ஹிட் ஆக்குகிறார். 2-->  தான் முதலே பயன்படுத்திய மெட்டுக்களை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார்.


இதிலும் குறிப்பிட்டு சொல்லும்படியான பாரிய்ய ஹாரிஸை கேலிப்படுத்தும் தாக்குதல்கள் பெரிய்ய ஹீரோக்களின் படங்களின் அல்பம் வெளியாகிறபோதே சுனாமிபோல பெரிய்ய அலையாக கிளம்பும். அண்மையில் வந்த அல்பங்களே இதுக்கு பெரிய்ய எடுத்துக்காட்டு. சூர்யாவின் 7ம் அறிவு, மாற்றான் விஜயின் நண்பன் போன்ற அல்பங்கள் கடும் ஏளனப்படுத்தல்களை எதிர்கொண்டது. ஆனால் ஜெயம்ரவியின் எங்கேயும் காதல், ஜீவாவின் கோ, உதயநிதியின் OKOK போன்ற அல்பங்கள் ஏலவே குறிப்பிட்ட பெரிய்ய மாஸ் ஹீரோக்களின் அல்பங்கள் எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளுடன் ஒப்பிடும்போது இல்லையென்று சொல்லும் அளவுக்கு அங்காங்கே சொற்பமான அடிகளையே வாங்கியிருந்தது.


இதுவரை வந்த அல்பங்களை கொண்டு 2012ன் Super Hit அல்பம் என்று நண்பனை சொல்லிவிடலாம். ஹாரிஸ் வழமையான பாணியிலிருந்து கொஞ்சம் மாறி புதுமைகளை புகுத்தியிருக்கிறார் என்று நடுநிலையாளர்களால் கூறப்பட்ட இந்த அல்பமும் வழமைபோல சகட்டு மேனிக்கு தாக்கப்பட்டது. நண்பனில் பழைய மாதிரியான ஹாரிசின் மெட்டுக்கள் இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் சம்பந்தம் சம்பந்தமே இல்லாத பக்திபாடல் மெட்டுக்களுடன் beatகள் ஒத்துப்போகாத தருணங்களில் கூட ஹாரிஸ் எதிர்பாளர்கள் இது அதின்ர கொப்பி அப்பிடி இப்பிடி என்று கூச்சலிட்டிருந்தனர்.

அண்மையில் மாற்றான் பாடல்கள் கேட்டபோது பெரும்பாலான பாடல்கள் எனக்கும் வேறு பாடல்களை ஞாபகப்படுத்தியதுதான்.

1. கால் முளைத்த பூவே - ”சுந்தரி சிறிய ரெட்டைவால்” கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில்
இரண்டு பாடல்களும் அப்பிடியே ஒரே மெட்டு என்று சொல்லேலாது. ஆரம்பத்தில் Mouth Organனோடு தொடங்கும்  chorus இசையும் (ரகுமானின் பாடலும் Mouth Organனுடனேயே ஆரம்பிக்கிறது) இடையிடையே வரும் பெண்களின் Chorous இசையும் இந்தப்பாடலை எனக்கு ஞாபகப்படுத்தியது.

2. நானி கோனி ராணி - தொடக்க இசை பச்சைக்கிளி முத்துச்சரம் ”கரு கரு விழிகளால்” பாடலை ஞாபகப்படுத்தியது. அதோடு பாடல் பூராவும் வரும்மெட்டு ஆதவன் ”ஏதோ ஏதோ பனித்துளி” பாட்டை ஞாபகப்படுத்தியது. ஆதோடு அயனின் ”நெஞ்சே நெஞ்சே”க்கு அடித்த drums அடியும் இதிலே பின்னணியில் வந்தது.

3. இரட்டை கதிரே -  எல்லோருக்கும் தெரிந்தது அயனின் டைட்டில் Song "வானம் யாவும் மேகம்”


மற்ற 2பாடல்களும் எங்கயோ கேட்டமாதிரி இருந்தாலும் என்ன பாடல்களை போல் அந்தப்பாடல்கள் இருக்கின்றது என்று கண்டுபிடிக்க முடியல. இதில் நிச்சயமாக இரட்டைக்கதிரே பாடல் KV.Anandன் வேண்டுகோளுக்காகவே அந்த அயன் Title Song மெட்டிவிருந்து உருவப்பட்டிருக்கும். வித்தியசமான அந்த மெட்டு அயனில் வந்தபோதே இது ஒரு முழுப்பாட்டாக வந்திருக்கலாம் என்று கவலைப்பட்டோரில் நானும் ஓராள்.

ஹாரிஸ் இப்பிடி பம்மாத்து காட்டி உல்டா விளையாட்டுக்கள் பண்ணும்போது எனக்கு Strike பண்ணுறதை ஹாரிஸ் ரசிகனாக இருந்தபோதும் நானும் பதிவுகள் மூலம் சொல்லிதான் வந்திருக்கிறேன். அது GV.பிரகாஸாக இருந்தால் என்ன யுவன்சங்கர்ராஜாகவிருந்தாலென்ன. ஆனால் இப்போது பொதுவாக எல்லா தரப்பிலும் இருந்து அடிவாங்குபவர் ஹாரிஸ் மட்டும்தான். இந்த விளையாட்டுக்களை ஹாரிஸ் மட்டுமல்ல எல்லாரும்தான் செய்கிறார்கள் ஆனால் ஹாரிஸ் கொஞ்சம் ஓவராக செய்கிறார்.

2010ன் சிறந்த படமான மைனா பட பாடல்களும் அப்போது பெரு வரவேற்பை பெற்றது. அதில் ”நீயும் நானும்” பாடல் ஆரம்ப்பிக்கும் மெட்டும் AR.Rahmanன் கருத்தம்மா பட உன்னிமேனன் சுஜாதா பாடிய ”போறாளே பொண்ணுதாயி”ல் ”வெள்ளாமை நீதான் வெள்ளாடு நாந்தான் வெட்கத்த விட்டுத் தள்ளம்மா”, "வெள்ளாம காட்ட விட்டுத் தர மாட்டா பண்பாட்ட கட்டிக்காக்கும்” வரிகள் அப்பிடியே மைனாவின் ”நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள” மெட்டுடன் ஒத்துப்போயிருந்தது.

வேட்டையில் யுவன்சங்காராஜாவின் ”தைய தக்கா” பாடல் ஆரம்பிக்கும்போது  (0.30s-0.37s) இடையில்(3.55s-4.02s), இறுதியில்(5.10s-5.17s)இடைவெளிகளிலும் வரும் ஒரு இசைசெருகல் அப்பிடியே விஜய்அன்ரனியின் வெடி பட "இச்சு இச்சு கொடு” பாடலின் (0.07s-0.20s) இசைசெருகலுடன் அப்பிடியே ஒத்துப்போகிறது. வெடி பாடல்கள் முதலிலும் வேட்டைபாடல்கள் பின்னரும் வந்தது.

அண்மையில் ”எங்கேயும் எப்போதும்” புகழ் இசையமைப்பாளர் சத்யாவின் 4வது திரைஅல்பம் ”பொன் மாலைப்பொழுது” வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இடம்பெற்ற ”அடிக்கடி முடி களைவதில் அபகரித்தாய்” பாடல் அப்பிடியே ஹாரிஸ் ஜெயராஜின் ஆதவன் ”ஏதோ ஏதோ பனித்துளி” பாட்டை ஞாபகப்படுத்தியது.

இப்பிடி அப்பிடி இப்பிடின்னு சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
திருப்ப திருப்ப ஒரே கதையுடன் வரும் மசாலாபடங்களை ரசிக்கிறோம். வேறு மொழி பட, Novel களின் inspirationனுடன் வரும் படங்களை கூட ரசிக்கிறோம் மெச்சுகிறோம். ஏன் ஹாரிஸின் ஆட்டைகளை குறைகூறினாலும் சொந்த நல்ல மெட்டுக்களை பாராட்டலாம்தானே?

முடிவு டிஸ்கி: ஹாரிஸையும் இவ்வளவு ரசிக்கிறனே. இவனுக்கு இசையறிவே இல்லையா? என்று யாரும் கேட்டால் எனக்கு அது இல்லாமலே இருந்து விடட்டும்!!

DirectX Render To Texture(RTT)ன் பயன்பாடு - I

”பொட்டலம் இப்போதெல்லாம் வெறுமனே திரைப்பட விமர்சனங்களை மட்டுமே காவி வருகிறது. வேறுவிடயங்கள் வருவதேயில்லை. வெறும் boringகா இருக்கிறது” என்பவர்களுக்கான சிறப்பு பதிவு இது. முதன்முதலாக முற்றுமுழுதான தொழில்நுட்பதிவாக இது வருகிறது. எனினும் இந்தப்பதிவு நிச்சயமாக குறைந்தளவு ஒருவருக்காவது பயனுள்ளதாக இருக்கும். 

நான் வேலை பார்க்குமிடத்தில் செய்யும் வேலைகள் பெரும்பாலும் ஒரு Game Engineஐயே மையமாக கொண்டது. அதாவது Project IGI போன்ற Military Video Game போன்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே எமது வேலைகள் பின்னப்பட்டிருக்கிறது. வேறு பாணியில் சொன்னால் அந்த Game இற்கும் பாவனையாளர்கள்(Users)இற்கும் இடையிலான தொடர்பை (API -Application Interface) மேற்கொள்ளக்கூடிய செயல்பாடுகளை செய்வதே எமது வேலை. 

அப்படியான செயற்பாடுகளில் ஒரு சிக்கலான வேலைதான். அந்த Game இலே நாம் விரும்பும் Objectsகளை வரைவது. அது அடிப்படை உருவங்களான முக்கோணம், செவ்வகம், வட்டம்,பல்கோணி என்பதிலிருந்து சிக்கலான உருவங்கள் வரை அது செல்லும். உண்மையில் வெறொரு Game Engineனின் Deviceல் dependஆகி எமது வேலைகளை செய்வது சற்று சிரமமானது. நாங்கள் நினைத்தபடி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவுகளை எடுத்து தொழிற்பட முடியாது. நாங்கள் தங்கியிருக்கும் Engine எவ்வாறு இயங்குகிறது மற்றும் அது மட்டுறுத்தியிருக்கும் விடயங்களை நாம் அறிந்தபிறகே முடிவுகளை எடுக்கவேண்டும்.

DirectX தவிர OpenGL போன்ற வேறு பல Techniquesகள் Video Gamingல் இருந்தாலும் நாங்கள் உபயோகிக்கும் DirectXல் உள்ள ஒரு சிறு நுணுக்கமான பிரயோசமான வேலையை பற்றியே இங்க பாக்கவுள்ளோம். பெரும்பாலும் DirectX என்று இங்கு சொல்வதெல்லாம் Microsoftன் Direct3D librariesஐதான். DirectX என்று பொதுவாக சொல்வது Direct3D, DirectDraw, DirectMusic, DirectPlay, DirectSound போன்ற எல்லா APIஐயும் சேர்த்துதான் எனினும் இவற்றில் Direct3Dயே பெரிதாக அறியப்பட்ட முக்கிய part என்பதால் DirectX, Direct3D மாறி மாறி ஒரே கருத்துக்காக பயன்படுத்தபடுவதுண்டு. இங்கே போடப்பட்ட தலைப்பில் உள்ள DirectX, Direct3Dயையே குறிக்கிறது.


Render To Texture என்ற பகுதி Direct3Dல் ஒரு பிரயோசமான பகுதியாகும். வெறொரு DirectX Deviceலும் தங்கியிருக்காது நாங்களாக சொந்தமாக create செய்து எமது பூரண கட்டுப்பாட்டில் வைத்து செய்யும் Applicationsகளுக்கு இந்த Render to Texture (RTT) என்ற தொழில்நுட்பம் பெரும்பாலும் தேவைப்படாது. எனினும் இது பயன்படக்கூடிய சந்தர்ப்பமாக இதை சொல்லலாம். நாங்கள் Textureல் (IDirect3DTexture9) எங்களுக்கு தேவையான பொழுதில் தேவைப்பட்டதை Renderபண்ண இந்த முறை முக்கியமாக தேவைப்படும். பின் இந்த render செய்த textureஐ (kind of surfaceஐ) வேறொரு தருணத்தில் பயன்படுத்தலாம்.




எனக்கு இதன் தேவைப்பாடு உணர்ந்த தருணம் இதுதான். நான் ஏலவே சொன்னதுபோல ஒரு Game Engineனிலேயே எமது செயற்பாடுகள் தங்கியிருக்கிறது. அந்த Gameனின் சில callbacksமூலமாக எமக்கும் Gameறக்கான தொடர்பாடல்கள் இடம்பெறும். அப்பிடியான ஒருசில callbackகளின் செயற்பாடுகள் ஒரு புது Game Versionனில் முற்றிலுமாக மாறிவிட்டிருந்தது. முதலில் எந்த வரையறையுமின்றி எந்த callbackகளிலும் பாவிக்ககூடியதாக இருந்த IDirect3DDevice9* புதியதில் ஒரு சில callbackகளிலேயே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது. தொடர்சியாக ஒன்றை கீறுவதென்றால் ஒரு frequentஆக call பண்ணப்படும் callback இருப்பது அவசியம். அந்த callbackல் device தரப்படாது deviceஉடன் தொடர்புடைய வேலைகளை செய்ய மட்டுறுத்தப்பட்ட இன்னொரு Interface வழங்கப்பட்டது. இந்த புதிய Interfaceல் இல்லாத IDirect3DDevice உடன் தொடர்பான ஒரு தொழிற்பாடு தேவையெனின் சும்மா சிரிச்சுக்கொண்டு இருப்பதை தவிர வேறொன்றும் செய்ய இயலாது.

2D Texts Drawn on Screen
எங்களது இலக்கோ Game Environmentல் 2D ல் அதாவது Screen Displayல் Textஐ Draw பண்ணுவது. ID3DXFontமூலமாக இலகுவாக இதை செய்துவிடலாம் ஆனால் ID3DXFont Objectகளை frame by frame call பண்ணும் callbackல் உபயோகிப்பது மட்டுறுத்தப்பட்டிருந்தது. (directX device இந்த callbackல் வழங்கப்படாமையால்) எனவே IDirect3DDevice access உள்ள இடத்தில் எமது Textஐ ஒரு IDirect3DTextureல் Render செய்து அந்த Textureஐ எமது frequent callbackல் பயன்படுத்திவிட்டால் இந்த இலக்கை அடைந்துவிடலாம்.


பதிவு பெருத்துவிட்டதால் அடுத்த பாகத்தில் C++ code snippetகளுடனும் விளக்ககுறிப்புகளுடனும் சந்திப்போம்!!!

திரைதகவல் பெட்டகம்-VIII (பாடகர் மாணிக்க விநாயகம்)

"பொம்பளைங்க காதலைதான் நம்பிவிடாதே” என்ற பாடல் மூலமாக 2002ஆண்டளவில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக பேசப்பட்ட பாடகர்தான் மாணிக்கவிநாயகம். Soupபாடல்களுக்கு காலங்காலமாக கிடைத்துவரும் வரவேற்புக்கு இந்தபாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ”உன்னைநினைத்து” படத்திற்காக பலரின் அபிமான இசையமைப்பாளராக அந்த காலத்தில் இருந்த சிற்பியின் இசையில் இந்தப்பாடல் வெளிவந்திருந்தது. இந்தப்படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்தஇசையமைப்பாளர் விருதுகூட சிற்பிக்கு கிடைத்திருந்தது. 

மற்ற பாடகர்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்தக்கூடிய கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரரான மாணிக்கவிநாயகம் திரைத்துறைக்கு வருவதற்கு முதலேயே பல பக்திப்பாடல் அல்பங்களுக்கு இசையமைத்தும் பாடியும் வந்துள்ளார். பெரும்பாலும் நெற்றிபூராக விபூதிப்பட்டையுடன் காணப்படும் இவருக்கு திரைத்துறையில் முதலாவது வாய்ப்பு கிடைத்தது இசையமைப்பாளர் வித்தியாசகர் மூலமாகதான். தில் படத்தில் ”கண்ணுக்குள்ள ஒருத்தி” பாடல்தான் இவரின் முதல் பாடல். அதன்பின்னர் பல ஹிட்பாடல்களை பாடிவந்த இவருக்கு பெரும்பாலான வாய்ப்புக்கள் வித்தியாசகராலயே வழங்கப்பட்டது. 

பாடகராக மட்டுமிருந்த இவர் தனுஷின் ”திருடா திருடி” படம்மூலமாக தன்னால் நடிக்கவும் முடியுமென்று காட்டியிருந்தார். தனது முதல் படத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தின் typical அப்பாவாக வந்து பலரையும் கவர்ந்திருந்தார். அதன்பின்னர் குணச்சித்திர வேடங்களை ஏற்று பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அண்மையில் யுத்தம்செய் படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது.

Manicka Vinayakam in Yedam Sei Movie
இவரது பேட்டியொன்றை கேட்கும் வாய்ப்பொன்று அண்மையில் கிடைத்தது. அதில் இவர் பல திரையுலக ரகசியங்களை கசியவிட்டிருந்தார். அதில் எவ்வாறு ஒருவரின் உண்மையான திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகின்றது என வெளிப்படையாக கூறியிருந்தார். AR.Rahmanன் உதவியாளராக இருந்து பின் தனியான இசையமைப்பாளராக மாறிய பிரவீன்மணிக்கு நட்பின் அடிப்படையில் பல இசையமைப்பு உதவிகளை புரிந்ததாக கூறியிருந்தார். கனடாவில் வசித்து வரும் பிரவீன்மணி இந்தியா வந்து இசையமைத்துவிட்டு செல்வதால் தனது உதவியும் அவருக்கு தேவைப்பட்டதாக சொன்னார். 

Composer PravinMani
மேலதிகதகவல்: AR.ரகுமானின் பெயரில் வந்த சில பாடல்கள் அந்தக்காலத்தில் உதவியாளராக இருந்த பிரவீன்மணியாலும் மெட்டமைக்கப்பட்டன என சந்தேகங்கள் இப்போதும் இருந்து வருகின்றது. முக்கியமாக பரசுராம் பாடல்கள் அந்தவகையறாவை சார்ந்தது எனசொல்லப்பட்டது. உதயா படத்தில் பாடல் இசை ரகுமான் எனினும் பின்னணி இசைக்கு பிரவீன்மணி சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அந்தப்பேட்டியில் மாணிக்கவிநாயகத்தால் சொல்லப்படாதவை.

பிரவீன்மணி இசையமைத்த Little John படத்தில் ”பூவுக்கு பிறந்ததாலே”, ஒற்றன் படத்தில் ”சின்னவீடா வரட்டுமா” போன்ற பாடல்களுக்கான மெட்டுக்கள் தன்னால் (மாணிக்கவிநாயகத்தால்) போடப்பட்டதாகவும் அதில் முதலாமதுக்கான அங்கீகாரம் பாடல் கசட்டில் பெயர் போடப்பட்டதன் மூலம் கிடைத்ததாகவும் மற்றதுக்கு கிடைக்கவில்லையும் என்று கூறியிருந்தார். எனினும் நட்பின் காரணமாகவே அந்த உதவி செய்ததாகவும் இதற்காக யாரையும் தான்குறைபட்டதில்லையெனவும் கூறியிருந்தார்.


மேலும் இப்படியாக உதவியாளர்களால் போடப்படும் மெட்டுக்களும் பெரிய்ய இசையமைப்பாளர்களின் பெயர்களில் இறுதியில் வெளிவருவதாகவும் உண்மையில் யார் உண்மையான மெட்டுக்கு சொந்தக்காரர் என்பது அறியமுடிவதில்லையென்றும் இது தமிழ்சினிமாவின் துர்ப்பாக்கியம் என்றுகூட சொன்னார் மாணிக்கவிநாயகம்.   

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-V (Cameron White)

சில வீரர்கள் மேல் இருக்கும் மதிப்பு மரியாதை அவர்களின் சில attitudeகளால் அல்லது தொடர்ச்சியான சறுக்கும் பெறுபேறுகளால் சிலவேளைகளில் அவர்கள் மேல் ஒரு வெறுப்பாக மாறிவிடுவதுண்டு. Australia அணியில் சகலதுறை வீரராக அறிமுகமான Cameron White எனக்கு ரொம்ப பிடித்தவீரரில் ஒருவராக அந்தக்காலத்தில் இருந்திருந்தார். பின்னர் தொடர்ச்சியான இவரின் மோசமான பெறுபேறுகளால் இவரை ஏன் அணியில் வைத்திருக்கிறார்கள் என்ற ரீதியில் இவர் மேல் வைத்திருந்த மதிப்பு மிகவும் வெறுப்பாக மாறியிருந்தது. 



உலககிண்ண போட்டிகளில் இவரின் மோசமான பெறுபேறுகளால் (உலககிண்ண போட்டிகளில் 22*ஏ இவரது கூடிய ஓட்டமாக இருந்தது) ஒருநாள் அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட White 2011 Januaryல் Michael Clarke T20இலிருந்து ஓய்வுபெற்றபின் பெற்ற T20 அணித்தலைவர் பொறுப்பை இந்தவருடம் 2012 Januaryவரை தக்கவைத்திருந்தார். உண்மையில் இவர் இறுதியாக தென்னாபிரிக்காவுக்கு எதிராக அவர்கள் நாட்டிலேயே 2011 Octoberல் இரு T20 போட்டிகளுக்கு தலமை தாங்கி 28, 39 என்று low scoring போட்டிகளில் நல்ல ஓட்டப்பெறுதியை பெற்றிருந்தார். 

ஆயினும் இவர் தலமை தாங்கிய 6 T20 போட்டிகளில் 2வெற்றிகளை மட்டுமே Australia பெற்றிருந்தது. அதோடு Australia உள்ளுர் T20 போட்டியான Big Bashல் Melbourne Starsக்காக விளையாடிய இவர் 8 போட்டிகளில் வெறும் 55ஓட்டங்களையே பெற்றிருந்தார். அதோடு அண்மைய போட்டிகளிலும் Victoriaக்காகவும் ஒரு 50 ஓட்டங்களை கூட இவரால் எடுக்க முடியவில்லை. இப்படியான காரணங்களுக்காக இவர் T20 போட்டியில் தலமைப்பதவி பறிக்கப்பட்டது மட்டுமில்லாது அணியை விட்டே வெளியேயும் அனுப்பப்பட்டார்.


இப்படியாக IPLதொடங்கும்போதே போதிய self confident இல்லாமேலே போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டியதாக இருந்தது இவருக்கு. முதலாவது போட்டியில் சங்கக்கார இலங்கையில் இருந்தமையால் முதல் போட்டியில் தலைவராக சென்னையுடன் மோசமாக தோத்தனர். தனது பங்கிற்கு 23(16) இவர் எடுத்தார். 2வது போட்டியில் 30*(22) எடுத்தார். ஒரு பவர் ஹிட்டராக அறியப்பட்ட இவர்மேல் போதிய நம்பிக்கை இல்லாமல் அடுத்த 2போட்டிகளுக்கும் அணியை விட்டு கழற்றி விடப்பட்டார். பின்னர் எல்லாப்போட்டிகளும் விளையாடிய இவர் சங்கக்காரவின் மோசமான formகாரணமாக அவர் அணியை விட்டு தானாக ஒதுங்கிய போட்டிகளிலெல்லாம் தலைமைத்துவ பொறுப்பை கையிலெடுத்ததுடன் பெரும்பாலான போட்டிகளில் அபாரமான திறமையை கனக்க காலத்தின் பின்னர் வெளிப்படுத்த தொடங்கினார்.


நாலைஞ்சு பந்துகளை மெதுவாக விளைாடி கொஞ்சம் eye எடுத்தப்பிறகே அடித்து நொருக்கும் பவர் ஹிட்டர் வகையராவைச்சேர்ந்த இவர் அடிகள் வழமாக பிடிக்க தொடங்கினால் எதிரணி பந்துவீச்சாளருக்கு அலுப்பை கொடுக்க கூடியவர். இந்த IPL போட்டிகளில் ஒரு 45 ஓட்டங்களுடன் ஐந்து முறை 50 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளார் இவர். Points table கடைசி இடத்தை பிடித்திருக்கும் இந்த அணியில் 2போட்டிகளில் வெல்ல இவரது பங்கு மிக முக்கியமாக இருந்திருக்கிறது.

இந்த வருடம் உலககிண்ண T20 போட்டிகள் இலங்கையில் நடக்குவுள்ள நிலையில் Australia தேசிய அணியில் அனைத்துவிதமான போட்டிகளிலும் கழற்றிவிடப்பட்ட இவர். இந்திய மைதானத்தில் இப்போட்டிகளில் காட்டும் சிறந்த பெறுபேறுகாரணமாக மீண்டும் T20 அணியில் இணைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கும் பலரில் நானும் ஒருவராக இப்போது இருக்கிறேன். June12 தொடங்கவுள்ள இங்கிலாந்து உள்ளுர் T20 போட்டியான Friends Lifeல் Northamptonshire அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ள இவர் அதிலும் திறமையை காட்டும் பட்சத்தில் தேசிய அணியில் இடம் உறுதியாக கிடைக்குமென நம்பலாம். 


Decan Chargers சார்பாக Dawanக்கு அடுத்தபடியாக கூடுதலான ஓட்டத்தை பெற்றவராக வைட் இருக்கிறார். அதோடு இந்த வருட போட்டிகளில் Gayleக்கு அடுத்தபடியாக 20Sixesஉடன் கூடுதலான Sixஅடித்தோர் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறார். 

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-IV (Chris Gayle)

சிலபேரை கிறிக்கெற்றில பிடிக்குமா பிடிக்காதோ என்று தெரியாம இருக்கும் அப்பிடி ஒரு வகையறாதான் இந்த கிறிஸ்கெயில். ஒரு foot movement Styleஆன பற்றிங் என்றில்லாமல் பற்றை அந்தரத்தில் பிடித்தபடி இவர் முழங்கும் முழக்கங்கள் இவரின்மேல் பிடிப்பும் அதே போல் ஒரு ஈவிரங்கமின்றி சாத்துறாரே என்று ஒருவித வெறுப்பும் எழ காரணமாக இருக்கிறார் Jamaicaவின் பயங்கர மனிதர். 


இலங்கையில் ஒரு கொஞ்சக்காலமா கிறீஸ் மனிதர்கள் என்று பயங்கர பீதி கிழப்பப்பட்டதல்லவா. அந்த கிறீஸ் மனிதன் எப்பிடியிருப்பான் எண்டதுக்கு உதாரணமா இவரின்ர உருவத்த சொல்லலாம். கறுத்த உயரமான ஆக்ரோசமான உடல்வாகு நட்டுவக்காலிகள் தலையை சுத்தி இருக்கிறமாதிரி தலையிழுப்பு. 

வழமைமாதிரி இவரப்பற்றி நீட்டி முழங்கி எழுத தேவையில்லை மேல போட்ட படமே எல்லாத்தையும் சொல்கிறது. இவர் பற்றோட Groundக்க நிக்கிற வரை bowling teamக்கு தொடர்ச்சியா வயித்த கலக்கியபடிதான். IVவது பாகத்தில இன்னொரு வீரரை பற்றிதான் எழுத வெளிக்கிட்டனான். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்லதான் Chris Gayle டெல்லியில 13sixersஓட 62bowlல 128அடிச்சு ஒரு பட்டாசு கடையில நெருப்பு போட்ட உணர்வை தந்திருந்தார். அதுக்கு பிறகுதான் இவர முதல்ல போட யோசனை வந்திச்சு! 

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-III (AB De Villiers)

AB De Villiers

இப்போது மிகவும் வெறித்தனமாக கிரிக்கெட் போட்டிகளை பார்ப்போருக்கு இந்த தலைசிறந்த வீரர் அறிமுகமான காலத்திலிருந்து இவரின் அபரிமிதமான வளர்ச்சிகள் ஒன்றும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் இவர் இதுவரை செய்த சாதனைகளை தெரிந்திருந்தாலும் தெரியாவிட்டாலும் இந்த 2012 IPL போட்டிகளில் இவரது துடுப்பாட்டத்தை பார்த்து புகழாதவர்கள் இருக்கமாட்டார்கள்.


உண்மையில் எந்தப்பெரிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்தாலும் Short Format போட்டிகளில் பெரும்பாலும் T20 போட்டிகளில் சிறப்பாக ஆடும்போதுதான் ரசிகர்களால் பெரியளவில் ரசிக்கப்படுகிறார்கள் பாராட்டப்படுகிறார்கள். ஆஹா ஓஹோ எண்டு தூக்கிவைத்து கொண்டாடப்படுகிறார்கள். பெரிதளவு இப்படியான Limited Overs போட்டிகளில்தான் ரசிகர்கள் கூடுதலாக லயித்துப்போயிருக்கிறார்கள் என்பதுதான் அதன் அடிப்படை காரணம். அப்பிடி அனைத்துவிதமான போட்டிகளிலும் சாதித்து காட்டிக்கொண்டிருப்பவர்தான் இந்த ஏபி.டி.வில்லியர்ஸ்.


உலககிண்ண போட்டிகளின் பின்னர் Graeme Smith ODI போட்டிகளின் தலமைப்பொறுப்புகளிலிருந்து விலகிய பின்னரும் John Botha T20 அணித்த லமையிலிருந்து தூக்கப்பட்டபின்னரும் AB.De.Villersக்கு தலமைத்துவ வாய்ப்பு 2011 June அளவில் வழங்கப்பட்டிருந்தது. எனினும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் T20 போட்டிகளில் கையில் ஏற்பட்ட காரணத்தால் விளையாடமுடியாத காரணத்தால் தனது முதலாவது முழுநேர தலைமைத்துவாய்ப்புக்கு இலங்கை தொடர்வரை காத்திருக்க வேண்டியதாகிவிட்டது. தலமைப்பொறுப்பில் இதுவரை இவர் விளையாடிய இலங்கை, நியுஸிலாந்துக்கெதிராக 2ஒருநாள் போட்டிதொடர் நியுஸிலாந்துக்கெதிராக T20 போட்டிதொடர் என்று அனைத்தையும் வென்றுள்ளார். 

அதற்கு மேலதிகமாக இந்தாண்டிலே வெறும் 8ஒருநாள் போட்டிகளில் 475ஓட்டங்களை 158.33என்ற ஓட்டசராசரியுடனும் 116என்று Strikerateலயும் பெற்றிருக்கிறார். இதைப்போலவே டெஸ்ட்டிலும் 4 போட்டிகளில் 378ஓட்டங்களை 75என்ற சராசரியில் பெற்றிருக்கிறார். இவரது இந்த ஆண்டின் இந்த கடும் போம்தான் IPLலிலும் தொடர்கிறது என்று இலகுவில் சொல்லிவிடலாம்.


Royal Challengers Bangalore பெரும்பாலான வெற்றிகளுக்கு கெயில்தான் காரணமாக இருந்துவிட்டிருந்தாலும் சில வெல்லவே முடியாது என கருதப்பட்ட போட்டிகளை கடைசி நேரத்தில் வந்து RCBபக்கம் மாற்றிய பெருமை De Villiersக்கு உண்டு. பெங்களுர் அணியில் இருப்போரின் திறமையை வைத்து பார்க்கும்போது இவ்அணி இலகுவில் playoffsக்கு சென்றிருக்கவேண்டும் என எதிர்பார்த்தாலும் அணித்தலைவராக முதல் 9போட்டிகள் வரை இருந்த Daniel Vettoriன் மோசமான தலமைத்துவமும் வெறும் ஓட்டங்களை மட்டும் கட்டுப்படுத்திய விக்கெட்டுக்களை பெரிதாக எடுக்காதா பந்துவீச்சு பெறுபேறுகளும்தான் இவர்களின் சறுக்கல்களுக்கு காரணமாக அமைந்திருந்தது.

விற்றோரி விளையாடிய 9போட்டிகளில் சிறந்த பெறுபேறாக 4Oversல் 20/1தான் இருக்கிறது. பெரிதாக ஓட்டங்களை விட்டுக்கொடுக்காத பந்துவீச்சாளராக இருந்தாலும் RCBன் Strike bowler Zaheer Khanன் Bad formமும் இந்த அணிக்கு விக்கெட்களை கொய்யக்கூடிய பந்துவீச்சாளரின் அவசியத்தை உணர்த்தியிருந்தது. எனது Facebookன் Status ஊடாகவும் இந்த மனக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தேன். அடித்தட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கே முரளிதரனின் வருகையின் தேவை உணரப்பட்ட நிலையில் May02 போட்டிக்கு பின் கடைசி 3போட்டிகளிலும் விற்றோரி அணியிலிருந்து கழற்றி விடப்பட்டு முரளிதரன் உள்ளே கொணரப்பட்டார். விற்றோரியைவிட உண்மையில் முரளி ஒரு genuine wicket taking bowler, சில நேரங்களில் கூடுதலாக ஓட்டங்களை கொடுத்தாலும் விக்ககெட்டுக்கள்தான் இவரது தீனி. எனவே அணியில் இவரின் வருகையால் அணி கடைசி 3போட்டிகளிலும் அபார வெற்றியீட்டியது.


இந்த வருட IPLல் கூடுதலான strike rate பெற்றொரில் 173என்ற பாரிய ஓட்டவிகிதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார் AB De Villiers. இந்தவருட போட்டிகளிலும் கெயில் ஓட்டங்களை மழைபோல பொழிந்துகொண்டிருந்தாலும். கெயிலில் காண முடியாத ஒரு style perfection class batting AB De Villiersல் பாக்கமுடியும். கெயில் ஒரு Power Hitter ஆனால் இவர் intelligent புத்திசாலித்தனமான துடுப்பாட்டவீரர். Royal Challengers Bangaloreன் விக்கெட்காப்பாளரும் இவர்தான்.


இந்தவருட IPLன் 5வது டெல்லிக்கெதிரான போட்டியில் 64*(42) ஓட்டத்தை பெற்று ManOftheMatch(MOM) விருதையும் பெற்று வெற்றிபெற காரணமாக இருந்தார். பின்னர் Puneக்கெதிரான 21வது போட்டியில் வெற்றிபெறவே முடியாது என்ற நிலையிலிருந்து 33*(14) அடித்து அதிலும் RCB வெற்றிபெற முக்கிய காரணமாயிருந்தார். ராஜஸ்தானுக்கெதிரான 30வது போட்டியில் இறுதி நேரத்தில் வந்து கோரத்தாண்டவம் ஆடி 59*(23) எடுத்து MOMவிருதுடன் போட்டியை வெல்ல காரணமானார். 50வது டெக்கனுடனான போட்டியில் Dale Steynக்கு சாத்து சாத்தெண்டு சாத்தி வெல்ல கஸ்டமென கருதப்பட்ட போட்டியை 47*(17) ஓட்டமெடுத்து MOMஉடன் வென்றுகொடுத்தார் இந்த AB De Villiers.

இவரது scoopஅடிகளும் இலகுவாக gapகளில் place பண்ணும் அழகும் அலாதியாக தூக்கி 6ஓட்டத்துக்கு அனுப்பும் நேர்த்தியும் அண்மைக்காலத்தில் வேறு ஒரு துடுப்பாட்ட வீரரிடமும் காணமுடியாத திறமை. நீங்கள் எந்த அணி ரசிகனாக இருந்தாலும் இவரது துடுப்பாட்ட ரசிகனாகத்தான் இருப்பீர்கள். இந்த IPLல் இவரது Batting order பலநேரங்களில் சர்ச்சைக்குரியதாக பட்டாலும் அது தனக்கு ஏற்றதுபோல மாற்றி அமைப்பதுதான் இவரது பலம். பலமுக்கிய தருணங்களில் Sourav Thiwary முன்னே சென்று ஆட்டத்தை இன்னும் இறுக்கமாக்குவதால் ஏன் AB.De எப்போதும் முன்னே செல்லக்கூடாது என்ற கேள்வி இன்னமும் எழுப்பப்பட்டவாறே உள்ளது. 

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-II (Sunil Narine)

Sunil Narine

இப்பிடியொரு Mystery bowler இருக்கிறார், வரும் காலத்தில் இவர் மற்ற அணிகளுக்கு தலையிடியாக இருக்ப்போகிறார் என்று தெரியவந்தது 2011Champions League T20 போட்டிகளின் போதுதான். மேற்கிந்திய தீவுகளின் Trinidad and Tobago அணிக்காக விளையாடிய இவர் அந்த போட்டிகளிவ் மிகவும் குறைந்த ஓட்டங்களை விட்டுக்கொடுத்து விக்கெட்டுக்களை அதிகளவில் கொய்திருந்தார். தேங்காய்க்கு பொச்சு இருக்கிறதுபோல இவர் தனது தலைமயிரை முன்னுக்கிருந்து பின்னுக்கு முடியும்வரை கூராக நடுவாக வெட்டியிருப்பது இவரின் தனிப்பாணி. விரைவில் இந்த ஸ்டயிலும் பிரபலமாகும் இருந்து பாருங்கள்.



Off spinner ஆன இவர் முதலில் இந்தியாவிற்கெதிராக அம்மண்ணிலேயே 3வது ஒருநாள் போட்டிக்காக மேற்கிந்தியதீவுகளுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்டார் முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்திருந்த மேற்கிந்தியதீவுகள் 10ஓவர்களில் 34ற்கு 2விக்கெட்டுகள் எடுத்திருந்த இவரது பெறுபேற்றுடன் அந்த போட்டியில் வெற்றியடைந்தது. அதன் பின்னர் அவுஸ்திரேலியாவுக்கெதிராக சொந்த நாட்டில் ODI series சமப்படுத்த இவரது பந்துவீச்சு முக்கியமாக இருந்தது. 5போட்டிகளில் 11இலக்குகளை சரித்திருந்தார் இவர். இந்த அவுஸ்திரேலியா போட்டிக்கு முதலே IPL ஏலத்தில் 700,000$க்கு எடுக்கப்பட்டிருந்தார் சுனில் நரய்ன்.


Kolkata Knight Ridersற்காக விளையாடிவரும் இவர் டெல்லிக்கெதிரான முதல் போட்டியிலும் பெங்களுர் றோயல் சலேஞ்சர்சிற்கெதிராக மூன்றாவது போட்டியிலும் விளையாடவில்லை. டெக்கனுக்கு எதிரான ஒரு போட்டி மழையால் தொடங்கவேயில்லை. So இன்றுவரை மொத்தமாக சுனில் நரைய்ன் விளையாடிய 9 போட்டிகளில் 15விக்கெட்களை 5.30 என்ற நல்ல economy rateல் சாய்த்துள்ளார் இவர். இந்த வருட IPLல் சிறந்த econmy பந்தவீச்சாளர்களில் இவர் முதல் இடத்தில் இருக்கிறார்.

இந்தவருட போட்டிகளில் கொல்கத்தா சிறப்பாக செயற்படுவது துடுப்பாட்டத்தில் கௌதம் கம்பீரினதும் பந்துவீச்சில் சுனில் நரய்னின்னதும் சிறப்பு பெறுபேறுகளும்தான் காரணம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. அணிக்காக ஓட்டங்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரங்களில் வந்து சிற்பாக பந்துவீசுவதில்தான் மலிங்கவுக்கு அடுத்ததாக சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் இவர். எவ்வளவு சிறப்பாக பந்துவீசினாலும் பெரிய்ய ஆர்ப்பாட்டமில்லாமல் வெற்றியைக்கொண்டாடும் சுனில் நரய்னில் எந்தவொரு கிரிக்கெட் ரசிகனுக்கும் ஈர்ப்பு வந்திருக்குமெனபதில் எந்தவொரு ஐயமுமில்லை.


இவரது இந்த அடக்கத்தை Facebookல் கீழ்வரும் status மூலம் குறிப்பிட்டிருந்தேன்.

எவ்வளவு சூப்பரா Bowl பண்ணினாலும் தான் Teamலயே விளையாடத Substitute என்கிற மாதிரி அடக்கமா இருக்கிற Sunil Narineனுக்கு தொப்பி கழற்றி (Hats off) வாழ்த்துக்கள்!

இலங்கையின் இன்னொரு Mystery பந்துவீச்சாளர் என ஆரம்பத்தில் அறியப்பட்ட அஜந்த மெண்டிசின் பந்துவிச்சுக்கள் காலம் செல்ல செல்ல ஆசிய அணிகளால் இலகுவாக கணிக்கப்பட்டு துவம்சம் செய்யப்பட்டு அவரது இடமே அணியில் நிரந்தரமில்லாது போனது போல இந்த இளம் பந்துவீச்சாளருக்கும் எதிர்காலத்தில் நிகழாவிடில் மகிழ்ச்சியே. 


இவரது கட்டுக்கோப்பான சிக்கனமான பந்துவீச்சு திறமையால் கொல்கத்தா அணித்தலைவர் கௌதம் கம்பீர் இவரை களத்தடுப்பு கட்டுப்பாடு உள்ள (Fielding restriction) உள்ள முதல்6 ஓவர்களில் ஒரு அல்லது இரு ஓவர்களையும், பெரும்பாலும் பந்துவீச்சாளர்கள் பயப்படும் இறுதி ஓவர்களிலும் பந்துவீச பயன்படுத்துகிறார். இவரும் அணித்தலைவரின் விருப்பத்தை முழுவதுமாக பூர்த்தி செய்கிறார். இறுதிஓவர்களில் ஓரிரு 4, 6 ஓட்டங்கள் போனாலும் விக்கெட்களை உடனடியாக விழுத்தி அவர்களை கட்டுக்கு கொண்டுவருவதில் சுனில் நரைன் கெட்டிக்காரர். 

சடுதியாக திரும்பக்கூடிய பந்துகளை வீசுவதிலும் சுழல் பந்துவீச்செனினும் 90km/h - 95km/h வரையான வேகமான மாற்றங்களுடனான பந்துகளை வீசுவதிலும் இவர் சிறப்பானவர். இவர் பெரும்பாலும் தனது பந்துவீச்சை ஆக்ரோசமாக எதிர்கொள்வோருக்கு வேகமாக பந்துவீசுவதிலும் வெட்டக்கூடிய spinning பந்துகளை வீசதான் விரும்புகிறார். தனது முதலாவது IPL போட்டிகளில் பங்கேற்கும் இவர் IPLன் இந்த வருடத்திற்கான Rising Star விருதைப்பெறக்கூடிய முக்கிய போட்டியாளர். 

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-I (Steven Smith)

இந்த தொடர் பதிவு இந்தவருடம் 2012ல் IPL சிறப்பாக செயற்பட்டுவரும் என்னை கவர்ந்த வீரர்களை பற்றிய பார்வையையும் அவர்களின் teamற்கான சிறப்பான செயற்பாடுகளையும் அலசலாக தருகிறது. முதலாவது பாகத்தில் Pune Warriors Indiaன் வீரர் Steven Smithஐ பற்றி பார்ப்போம்.

Steven Smith

இவரை பெரும்பாலோனோருக்கு 2010 மேற்கிந்தியத்தீவுகளில் நடந்த T20 உலகக்கிண்ணபோட்டிகளிலே பெரிதாக தெரியவந்திருக்கும். All rounder ஆக அறிமுகமான இவர் அந்த போட்டிகளில் பந்துவீச்சில் சிறப்பாக பிரகாசித்திருந்தார். கிட்த்தட்ட Shane Warneஐ போன்ற பந்துவீச்சுப்பாணியை கொண்ட இவர் பற்றிங் பண்ணும் பாணியும் கொஞ்சம் வித்தியாசமானது.  பற்றை நிலத்தில் ஊன்றாமல் அந்தரத்தில் வைத்து காற்றடிப்பது போல மேலும் கீழும் அசைத்தபடி துடுப்பெடுத்தாடும் unorthodexபாணியிலான துடப்பாட்டம். நன்றாக களத்தடுப்பினால் இவர் அணியை நன்றாக Active ஆக வைக்ககூடியவர். T20ல் அறிமுகமாகி ODI போட்டிகளிலும் Australia அணிக்காக ஆடத்தொடங்கிய இவர் குறைந்த காலத்திலேயே Test போட்டிகளிலும் விளையாட தொடங்கினார். மிகவும் இளவயதிலேயே இவரை கூடுதலான எதிர்பார்ப்போடு எடுத்து இவரது careerஐ வீணாக்கிவிட்டார்கள் என்ற கருத்தும் இருந்து வருகிறது. 



பலரால் விரும்பப்பட்ட விரராக இருந்தாலும் All rounder என்ற பெயரில் fielding மட்டுமே உருப்படியாக செய்து கொண்டு batting, bowling இரண்டிலும் போதிய consistentஇல்லாது சறுக்கியபடி இருந்தமையால், ஏன் இவர் Australian teamல இன்னும் இருக்கிறார் என்ற சந்தேகம் என்னைப்போல் பலரக்கும் ஏற்பட்டது. முக்கியமாக இங்கிலாந்து எதிரான 2010-2011 Ashes Seriesல் வாய்ப்புக்கிடைத்த மூன்று போட்டிகளிலும் சறுக்கி Ashes கிண்ணம் இங்கிலாந்து பக்கம் போக ஒரு காரணமாக இவரும் இருந்துவிட்டிருந்தார். தொடர்ச்சியான இவரின் சறுக்கல்களால் டெஸ்ட் போட்டிகளிலிருந்து அணியில் தூக்கப்பட்ட இவர் பின்னர் T20, ODIல இருந்து தென்னாபிரிக்கா சுற்றுலாவின் பின் நீக்கப்பட்டார். 


2011ன் இறுதியளவில் Australia உள்ளுர் போட்டியான BIG BASHல் சூப்பர் என்று சொல்லாவிடினும் ஓரளவு திறமையை வெளிப்படுத்தியிருந்த Steven Smithஐ Pune Warriorsல் தெரிவு செய்தமை என்னை பொறுத்தவரை ஆச்சரியமாகத்தான் இருந்தது. தேசிய அணியிலேயே இடம் கிடைக்காத ஒருவரை மினக்கெட்டு overseas வீரராக தெரிவது ஏன் என்று சரியாக புலப்படவில்லை. உண்மையில் ஸ்டீபன் ஸ்மித் திறமையானவர் என்றாலும் தொடர்ச்சியான சறுக்கல்கள்தான் பலருக்கும் அவரின் மேலான நம்பிக்கை தளர்ந்துபோக காரணமாயிருந்தது. 

ஆனால் IPLல் தான் விளையாடிய மும்பைக்கெதிரான முதல் போட்டியிலேயே 39ஓட்டங்கள் (low scoring game) எடுத்து Man of the Match ஆகி அணியில் தனது தெரிவுக்கான தேவையை உறுதிப்படுத்தினார். என்னைப்போல அவரை ஜோக்கர் போல பார்த்த பலருக்கும் மூஞ்சையில் கரியப்பூசினார். இவரது சிறிய கண்ணும் கொஞ்சம் கொழுகொழுப்பான உடலமைப்பும் முள்ளுமுள்ளுப்போன்ற தலையும் ஒரு ஜோக்கர் போன்ற ஒரு தோற்றத்தையே பாக்கிறவர்களுக்கு ஏற்படுத்தினாலும் இப்போது இவரின் ரசிகனாக மாறியவர்களில் நானும் ஒருவானாகிறேன். 


IPLல் பெரும்பாலும் 4வது இலக்க துடுப்பாட்ட வீரராக வந்து கடைசி நேரங்களில் அணிக்கு தேவையான ஓட்டங்களை அதிரடியாக குவித்து வந்தார். Kings XI Punjabற்கெதிராக 25(12), CSKஎதிராக 44*(22) Delhi எதிராக 34*(13) Decanஎதிராக 26(13), 47*(27) என்று புகுந்து அதிரடி அராஜகம் செய்திருந்தார். இவரது தொடர்ச்சியான கடும் போம் காரணமாக 4வது இலக்க துடுப்பாட்டத்திலிருந்து 2வதாக கடைசி 3போட்டிகளில் உயர்த்தப்பட்டார். அதில் முதல் போட்டியில் 47 எடுத்தாலும் கடைசி இரண்டிலும் 2, 14என்று சறுக்கியிருந்தார். 

இவரது பங்கு துடுப்பாட்டத்தில் மாத்திரமல்லாது களத்தடுப்பு, அணியை துவண்டு விடாமல் inspireபண்ணுவதிலும் முக்கியமாக இருக்கிறது. இவர் பந்துவீசக்கூடியவராக இருந்தும் அணித்தலைவர் கங்கூலி இவருக்கு இதுவரை பந்துவீச வாயப்பு வழங்காதது பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளது. நல்ல போமில் இருக்கும் இவர் வாய்ப்பு வழங்கப்பட்டால் bowlingலயும் கலக்குவார் என்பது என்னைப்போல இவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாயிருக்கிறது.


சனிக்கிழமை கொல்கத்தாவுடனான போட்டியில் இவரது களத்தடுப்பு இவர் என்ன சூப்பர்Mana என்று commentators மற்றும் பார்வையாளர்கள் கேட்குமளவிற்கு இருந்தது. 6 ஓட்மென்று கருதப்பட்ட பந்தை அலேக்காக வானில் பாய்ந்து தனது கைகளுக்குள் அகப்படுத்தி கொண்டாலும், தான் எல்லைக்கோட்டை கடந்து செல்லக்கூடிய வாய்ப்பிருந்தமையால் அதை அப்படியே உள்ளே எறிந்து அந்த 6ஓட்டத்தை 2ஓட்டமாக்கயிருந்தார். அந்தப்போட்டியை பார்த்தவர்களுக்கு அது என்னதொரு brilliant  attempt எண்டு தெரிந்திருக்கும். கையை தேய்த்து தேய்த்து வாயால் கையை ஊதி ஊதி களத்தடுப்பில் ஈடுபடும் இவரது பாங்கு அற்புதமாயிருக்கும். 

இவரது தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை IPLலிலும் மீண்டும் Australia அணியில் விரைவிலும் பார்ப்போம். இந்த வருட IPLல் என்னைக்கவர்ந்தோரில் இவர் முக்கியமான இடத்திலுள்ளார். 

Steven Smith's அந்த அற்புதமான fieldingஐ பார்க்க..
http://www.youtube.com/watch?v=JE-xBIfbXew

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்