பிரபலமாகாத நல்ல படங்கள்-I - சனிக்கிழமை சாயங்காலம் 5மணி

ஒவ்வொரு வருடமும் பெரிதாக ஆர்ப்பாட்டமில்லாமல், விளம்பரமில்லாம் வரும் படங்களில் நாலைந்து தரமான நல்ல படங்களாக இருப்பது வழமை. அப்படியான படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படாமலே போய்விடுவது துரதிர்ஷ்டமே. அப்படியான பெரிதாக அறியப்படாத படங்களை பற்றி எனது பார்வையை சிறிதாக தருவதே இந்த தொடர் பதிவின் நோக்கமாகும். இதில் நான் பகிரப்போகும் படங்கள் கனக்க காலத்திற்கு முதல் வந்த படங்களாக இருக்கலாம். எனினும் நிறைய பேருக்கு போய் அந்த படங்களைப்பற்றிய தகவல்கள் போய் சேரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த தொடர் பதிவை ஆரம்ப்பிக்கிறேன்.


பெரிதாக புறொமசன்கள் + ரசிகர்கள் மத்தியில் பெரிய்ய எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்கள் இப்போதெல்லாம் பெரும்பாலும் சொதப்பிவிடும் நிலையில் அறிமுகமேயில்லாத அறிமுக நடிக, நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் வரும் ஒரு சில படங்கள் எங்களை ஆகா ஓகோ போடச்சொல்லிவிடும். மனதில் லபக்கென்று பதிந்துவிடும். இப்படியான படங்களுக்கு முதலில் தியட்டரில் ஆட்களே இருக்காது. பின்னர் பார்த்தவர்களின் வாய் வழி தகவல்கள் மூலம் கவரப்பட்டு சனம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி சில நேரங்களில் அப்படம் நல்ல ஹிட் படமாக கூட மாறிவிடும். அப்படியான படங்களுக்கு உதாரணமாக மௌனகுரு, பசங்க, நாடோடிகள் போன்றனவற்றை குறிப்பிடலாம். ஆனால் பரிதாபமான விடயம் என்னவென்றால் இப்படியான சில படங்களளைப்பற்றிய கருத்துக்கள் மக்களுக்கு போய் சேரமுதல்லே தியட்டரிலிருந்து தூக்கப்பட்டு விடும். ஆரண்யகாண்டம், டூ, ஈரம் போன்ற படங்கள் இவற்றில் இரண்டாவது வகை.


இந்த தொடர் பதிவில் பெரும்பாலும் 2ம் வகைப்படங்கள் பற்றியே பேசப்படும். இப்படி 2010ன் இறுதியில்வந்த படம்தான் இந்த ”சனிக்கிழமை சாயங்காலம் 5மணி”. இப்பிடியொரு படம் வந்ததென்று எனக்கு படம் பாக்கும்வரை தெரியவே தெரியாது. ஒரு நண்பன் ”நல்ல படம் இரவில பாக்க இன்னும் நல்லா இருக்கும்” எண்டு  சொல்லி தந்தான். ஒரு 5 நிமிடம் கழிந்தபோதே விளங்கியது படம் மக்ஸிமமா போகப்போகுதெண்டு. கடந்த கிழமைகள் கடுமையான உடல் அலுப்பிலிருந்தபோதும் இரவு 10மணிக்கு தொடங்கிய படத்தை நிறுத்த மனமின்றி முழுவதும் பார்த்துவிட்டுதான் அன்று நித்திரைக்கு சென்றேன். 

படம் ஆரம்பிக்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாகதான் ஆரம்ப்பித்தது ஒரு செட்டில எடுத்த பாடலுடன் ஆரம்பித்தது படம். வழமையா படம் எப்பிடி எடுக்கப்பட்டது என்ற காட்சிகள் படம் முடிந்தாப்பிறகே போடுறது வழமை . இதில் இந்த முதல் பாடலுக்கிடையில் இடக்கிடை போட்டார்கள். அதோடு தங்களின் முதல் படைப்பான மதுரை TO தேனீ - வழி ஆண்டிப்பட்டி படத்தின் வெற்றிக்கு நன்றிகள் போட்டார்கள். (அந்தப்படம் வெற்றியோ வெற்றியில்லையோ எனக்கு தெரியாதுங்க). அந்த படத்தின் இயக்குனர் ரதிபாலா இதில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நாயக நாயகி சரத், மாலதியும் அறிமுக இயக்குனர் ரவிபாரதியும் சேர்ந்து உருவாக்கியிருந்தனர் இந்தப்படத்தை.


கிராமத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை திரில்லிங்கோ திரில்லிங். City life கதையில்தான் இப்படியான thrill கதைகள் தரமுடியும் என்ற நம்பிக்கையை தகர்த்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தின் சுவாரஸ்யம் குறையாமா படத்தை smoothஆக கொண்டு செல்லும் இயக்குனரை தூக்கி கொண்டாடலாம். படத்தில் என்ன நடக்கின்றது ஊகிக்கவே முடியாது. படம் ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் கதிரை நுனியிலிருந்து பாக்ககூடிய ஒரு படம். படத்தின் இறுதி 10நிமிடங்களிலேயே முடிச்சுக்களை அவிழ்க்கின்றார் இயக்குனர். நான் இதுவரை பார்த்த திரில் படங்களில் இதற்கும் முக்கிய ஒர இடம் கிடைத்து விட்டது.


படத்தில் பெரும்பாலானோர் புதுமுகங்கள்தான். (சரத்தின் அம்மா தவிர்த்து) ஆனால் பொறுப்பறிந்து பின்னியிருக்கிறார்கள். அனைவரும் இயல்பாக நடித்திருப்பது படம் பார்க்கிறோம் என்ற ஒரு தோற்றப்பாட்டை இல்லாமல் செய்திருந்தது. முக்கியமாக ஆரம்பத்தில் வரும் அந்த பொலிஸ் நன்றாக சாதாரணமாக நடித்திருந்தார். வக்கீல் பொலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சரத்தை மீட்கும் காட்சி, பெண்ணின் வீட்டில் வந்து சண்டை பிடிக்கும் உறவினரின் காட்சி ஆகியன இந்தப்படத்தின் reality காட்சிகளின் முக்கியமானவை. இதில் எனக்கு சொதப்பியிருப்பது போல தோன்றுவது நாயகன் சரத்தான். இன்னும் perform பண்ணியிருந்திருக்கலாம். 

இப்பிடியொரு தரமான படத்தை எப்பிடி இவ்வளவுகாலம் மிஸ் பண்ணினேன்?  இதுதான் இப்பொழுது என்னில் எழும் கேள்வி. பாக்காதஆக்கள் கட்டாயம் பாருங்க சார். திரில் பட ரசிகரா உங்களுக்கும் நிச்சயம் இந்தப்படம் பிடிக்கும். அப்பிடி பிடிக்கேலனா சொல்லுங்க. நான் புளொக் எழுதுறதே விட்டுடுறன். :பி

மொத்தத்தில் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி = மணிப்படம்

முப்பொழுதும் உன் கற்பனைகள் - திரைப்பார்வை

முப்பொழுதும் உன் கற்பனைகள் - இந்த படத்தின் எதிர்பார்ப்புக்கு இருந்த முக்கிய 3 காரணங்கள் 1.அமலாபால் 2.ஜீவி.பிரகாஸ்குமார் 3.விண்ணைத்தாண்டி வருவாயா, கோ படங்களை தயாரித்த கம்பனியின் படம். கணேஷ் விநாயக் என்ற இயக்குனரின் (இறுதியில் எல்ரெட் குமாரால் இயக்கி முடிக்கப்பட்டது ???)  முதல்படம் என்பதால் அவருடைய பெயர் செல்லாக்காசகவே promotionகளில் இருந்தது. அது வழமைபோல எல்லா புதுமுகங்களுக்கும் இருப்பது தவிர்க்கமுடியாதது. Why this Kolaveri போன்ற ஒரு சில exceptional casesதான் புதுமுகங்களிலும் பலத்த எதிர்பார்பை நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்துகிறது.


படத்தில் நாயகன் அதர்வாவுக்கு பொருந்திய stylishஆன modern கதாபாத்திரம். தனது முதல் படமான பானாகாத்தாடியிலேயே நல்ல பெயர் எடுத்திருந்தாலும் அவரது உடல்வாகுக்கு அந்த படத்தில் சேரிப்புற இளைஞனாக வந்திருந்தமை எனக்கு உறுத்தலாக இருந்தது. அந்த குறையை இந்த படத்தில் நீக்கி இருக்கிறார்கள். இவரது தமிழ் பேசும் பாணி கொஞ்சம் artificial போல ஒரு உணர்வை தருகிறது. அதர்வாவின் குரல் சாதாரணமானவர்களிலிருந்து வித்தியாசமானதுதான் ஆனால் பானா காத்தாடியில் அப்படி உணர்வு பெரிதாக ஏற்படவில்லை இதில் அது தெரிந்தது. வரும்படங்களில் இதைக்கவனத்தில் கொண்டால் நல்லா இருக்கும்.


அதர்வா இதுவரை நடித்த 2படங்களின் ஹீரோயின்களும் தமிழில் ஒரு கலக்கு கலக்குவார்கள் என எதிர்வுகூறப்பட்டுள்ள நடிகைகள். சமந்தா தெலுங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பானா காத்தாடியிலேயே அதர்வாவின் நடிப்பும் அவர் தன்னகத்தே கொண்டிருக்கும் attractiveஆன lookம் எனக்கு நல்லா பிடித்திருந்தது. முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்திற்கு தேவைப்பட்ட இந்த இயல்புகளை சிறப்பாக அதர்வா வெளிக்கொணர்ந்திருக்கிறார். தமிழ்சினிமாவில் இவருக்கும் அப்பா முரளியை போல நல்லவொரு இடம் கிடைக்கப்போகும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகிறது. 

உண்மையாக இந்தப்படத்திற்கொரு பெரிய பலமென்றால் அது அமலா பால்தான். (பாலா போலா? என்ன இழவோ எழுத்தோட்டத்தில கூடி பால் எண்டுதான் போட்டாங்க சார்!) இந்தப்படம் பற்றிய பேச்சு இவா நடிக்கின்றா என்றதும்தான் பெரிதாக வர ஆரம்பித்திருந்தது. தற்காலத்தில் பல இளவட்டங்களின் கனவுக்கன்னியாக அமலா பால் ஆகிவிட்ட நிலையில் கைவசம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் + இளசுகளின் ஆதரவோடு இவர் காட்டில் இப்ப அடை மழைதான்.


கொஞ்சம் படங்களில் நடித்திருந்தாலும் அந்தக்கால அமலாவுக்கும் அப்போது நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோலதான் இப்போதைய அமலாவுக்கும். அமலா என்று பெயர் வைச்சிருந்தாலே இப்பிடிதானோ? (ஆனால் எனக்கு இன்னும் அப்பிடி என்னதான் மக்களுக்கு அமலாபாலில கிறுக்கு பிடிக்ககாரணம் என்று தெரியல. அமலா பால் முதலில் நடித்த விகடகவி, சிந்துசமவெளி படங்களை யாராவது பாத்திருந்தா இப்ப இப்பிடி இருப்பாங்களோ தெரியல). தெய்வதிருமகள், வேட்டை பிறகு அமலா நடித்த படம் வெளியாகியிருக்கிறது அதுவும் ஒரே நாளில் இரண்டு படங்கள். மற்றையது ”காதலில் சொதப்புவது எப்படி”

இயக்குனர் கணேஷ் விநாயக்  தனது முதல் படத்தில் கஸ்டப்பட்டு நேர்த்தியா வேலை செய்திருப்பது தெரிகிறது. நல்லதொரு படத்தை தந்த திருப்தி இவருக்கும் நல்லதொரு படத்தை பார்த்த திருப்தி எங்களுக்கும் முப்பொழுதும் உன் கற்பனைகள் மூலம் பெரும்பாலும் கிடைத்திருப்பது உறுதிதான். அதற்காக படம் பக்கா டாப் மார்க் படமென்று சொல்வதற்கில்லை. படத்தில் 6பாடல்கள்தான் என்றாலும் குனிந்தால் நிமிர்ந்தால் பாட்டு என்று அடிக்கடி அள்ளி இறைத்திருப்பதுபோல் ஒரு உணர்வை படத்தில் காணமுடிந்தது. ஜீவி.பிராகாஸ் தனது நண்பர்தான் என்பதால சரியான கவனமெடுத்து இசையமைத்ததாக கூறியுள்ள இயக்குனர் அதுக்காக பாடல்கள் பலவற்றை சும்மா தேவையில்லாமல் புகுத்தியுள்ளது அப்படியே கண்கூடாக தெரிகிறது.

GV.PrakashKumar
படத்தின் சில conceptகள் ஏற்கனவே பல தமிழ்படங்களில் வந்திருந்தாலும் அதில் புதினத்தை தனது பாணியில் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளமையால், முதலே இதமாதிரி படங்களை பார்த்தோம் என்ற உணர்வை ஏற்படாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். இப்படியான Action+Thriller படங்களில் Logic மீறல்கள் பார்ப்பது தேவையற்றதோடு அப்படியான தவறுகள் தவிர்க்கமுடியாதது என்றமையால் அவற்றை கணக்கெடுக்காமல் விட்டுவிடுவதே ரொம்ப நல்லது. Action சண்டைக்காட்சிகளை நல்ல தரமாக எடுத்திருந்தமை ரசிக்ககூடியதாக இருந்தது.

அமலாவுக்கு மைனாவின் பிறகு நல்ல ஒரு படத்தில் முழுவதுமாக ஹீரோவுக்கு இணையாக படத்தில் ஆளுமை செய்ய நல்லதொரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. பாத்திரத்திற்கேற்றபடி இளமையாக கவர்ச்சியாக நடித்திருக்கிறார்.  உண்மையா படத்தில 2காமெடியன்கள் 1.சந்தானம் 2.படத்தில நடிக்காமலே TR.ராஜேந்தர். (படத்தில் அதர்வாவின் Favourite heroவாக   TR. So இடைக்கிடை TRன் காட்சிகள் TVல ஒளிபரப்பாகும் சந்தர்ப்பங்கள் உண்டு) சந்தானம் இதில் Americaல இருந்து வந்த Officerமாதிரி Hi-Fi கெட்டப்பில் வருகிறார். அசத்தோ அசத்தென அசத்துகிறார். TR TVல வருற காட்சிக்கு தியெட்டரில் பலத்த கரகொசங்கள் சிரிப்புகள். நடிகர் ஜெயபிரகாசிற்கும் இதில் முக்கிய வேடம். பசங்க பட வெற்றியிலிருந்து குணச்சித்திர வேடங்கள் பல இவரிடமே செல்கின்றன. இப்போது வருகின்ற பலபடங்களில் இவரை பார்ப்பதை தவிர்க்க முடியாது.

Jayaprakash
படத்தில் பாட்டுகள் பல வீண்செருகல்கள்தான் இப்ப பாட்டுவரும் எண்டு சொன்னா நிச்சயம் கொஞ்ச நேரத்தில பாட்டு வந்திரும். ஜீவீ.பிரகாஸ்குமாரின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருந்தாலும் தெய்வதிருமகள், மயக்கம்என்னவில் கொடுத்த classics இதில் miss ஆகினமாதிரிதான் எனக்கு தோன்றுகிறது. ஆனால் குறை சொல்வதற்கே இல்லை. பெரிதும் எதிர்பார்த்த ”கண்கள் நீயே” பாட்டை நல்லா touchingகா எடுத்திருந்தமை இயக்குனரின் திறமைக்கு சான்று. இந்த பாடலில் வரும் அந்த சின்ன தம்பியும் அழகாக நடித்திருந்தமை இன்னும் சிறப்பு.பின்னணி இசையில் இன்னும் செய்திருக்கலாம்.

படத்தில் பாடல்கள் படத்தின் வெயிட்டுக்கு கூடிவிட்டதென்று எண்ணியமையாலோ என்னவோ ”சொக்கு பொடி போட்டாலே” பாடலின் சில வரிகளை கத்தரித்து கொஞ்சம் குறைவான நேரத்தில் அந்த பாட்டை முடித்துவிட்டனர். அத்தோடு Production Companyக்கு விசுவாத்தை காட்ட ”கோ” VTV படங்களிலிருந்து காட்சிகள் சில படத்திலே காட்டப்பட்டிருந்தன.  பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் அழகாக இருந்தது.

ஒருசில குறைகள் பல பிளஸ் பாயிண்டுகள் என்று பார்ப்பவர்கள் நல்லவொரு படம்பார்த்தம் என்று சொல்லக்கூடிய படம்தான் முப்பொழுதும் உன் கற்பனைகள். அருமையான தமிழ் பெயரில் படத்தை பெயரிட்டமைக்கு உரியவர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள்.

காதலர் தினம் 2012

காதலர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்! 
----------------------------------------------------------------------

வசந்தமாகுமே என் இலையுதிர்காலங்கள்
உன் வரவுப்பதிவுகளால் நி்ரம்பும் எனது நாழிகைகள்!
அர்த்தமாகுமே எனது கிறுக்கல்கள்
உந்தன் குரல் மீடிறனிலே அதுவும் ஒரு ஹைகூதான்!


அத்தி பூத்த மழைதனிலே
பாலைவன வானவில் ஓவியம் நீ!
குபேரன் கொடுத்த லஞ்சத்திலே
பிரம்மன் படைத்துவிட்ட அதிசயம் நீ!


வழிந்தோடும் நதியின் தெளிவு
உன் முகத்தில் பார்க்கின்றேன்!
கண்மணி நீ சென்ற இடமெல்லாம்
படுத்துப்போகும் குங்கிலிய விற்பனைகள்!


நீவரும் சாலையோரம் எங்கினும்
உன் கொலுசொலி எதிர்பார்த்து நான்!
நீ Hello சொல்லாத நாட்கள் எல்லாம் 
HELL தானடி எனக்கு!


அமாவாசை நடுநிசியில்
முழுநிலவை தொட்டுவிட துடிக்கிறேன்!
தோழர்களின் நிந்தனைகள்
செவியில் உறைக்கா போதனைகள்!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்