இவர்களையும் கொஞ்சம் கவனியுங்க!


எங்கயாவது கொடுமைகள் நடந்தால் உற்று நோக்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தும் நடுநிலை நாடுகள் கூட ஏன் எங்கள் விடயத்தில் மட்டும் மௌனம். இஸ்ரேல் காஸாவிலுள்ள அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது கொடுர தாக்குதல் நடத்தியபோது குய்யோ முறையோ என்று கூக்குரலிட்ட நாடுகள் எங்கள் விடயத்தில் மட்டும் பெட்டிப்பாம்பாக அடங்கியிருப்பது ஏன்?? நாங்கள், தமிழ்பேசுபவர்கள் அவர்களுக்கு மனிச ஜென்மங்களாக தெரியவில்லையா? அடிமைகளாக இருக்க பிறந்தவர்களா நாங்கள்? வன்னியில் அப்பாவி மக்கள் நாள்தோறும் கோர எறிகணைதாக்குதலாலும் விமானத்தாக்குதலாலும் உடலங்கள் சிதறி பலியாவது உனக்கு தெரியவில்லையா சர்வதேசம்?

முன்பேயிருந்தே வறுமையின் பிடிகளில் சிக்கியும் யுத்தத்தின் கோரதாண்டவத்திலும் அகப்பட்டு வாழ்வில் நிம்மதியற்று வாழ்ந்து வந்த மக்களுக்கு கிடைத்திருக்கும் பரிசை பாருங்கள். யுத்தம் நடைபெறும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை முதலில் உறுதிப்படுத்துவதுதானே அவசியம் ஆனால் மக்களுக்கு வசந்தம் என்று கூறிக்கொண்டு அவர்களையே கருவறுக்கும் வேலை நடைபெறுவது மிகவும் நல்லம்!

பாதுகாப்பு வலயம் என்று கூறப்பட்ட இடங்களிலும் போர் நிறுத்தம் என்று கூறப்பட்ட நேரங்களிலும் குண்டுகளை பொழிந்தால் மக்கள் உயிர் தப்புவது எவ்வாறு? எவ்வாறாயினும் ஒருவாறு தப்பி மறுகரைக்கு வந்தால் கூடி நடப்பது என்ன? அனைவருக்கும் தெரிந்தது. எத்தினை செம்மணிகளை கண்டிருப்போம்.

உயிர் போவது எல்லாம் பெரிசில்லை எதாவது ஒரு விபத்தென்றாலோ வருத்தம் எண்டு செத்தாலோ கொஞ்ச நேரம் தான் உத்தரிப்பு. சாகப்போறம் எண்டு தெரிந்த படியே எறிகணை சத்தத்திற்கும் விமான சத்தத்திற்கும் பயந்து பங்கரில் ஒழிந்தபடியே சாவை எதிர்நோக்கி இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தத்தை பற்றி நான் கதைக்கவில்லை அதில் சரி பிழை பற்றி கதைப்பது அர்த்தமற்றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் எல்லாம் போராட்டங்கள் ஆனால் இங்க நடப்பதெல்லாம் என்ன? உண்மைகளை இங்க கதைக்க தடைதான் ஆனால் நடைபெறும் அநீதியை பற்றி அறிந்திருக்கவேண்டாமா? பலருக்கு இதுகள் பற்றி ஒண்டுமெ தெரியாதிருக்கிறது. எனக்கு தெரிந்த வகையிலேயே என்னுடன் படிக்கும் சக மாணவர் இருவரின் குடும்பங்கள் அங்கே அகப்பட்டிருக்கின்றன. என்ன பாடுபடும் அவர்களின் மனசு. அற்ப சொற்ப சலுகைகளை அனுபவித்தபடியே சொகுசாக இருக்கவே பலர் விரும்பிறம். ஒரு தடைவையாவது அவர்களுக்காக கடவுளிடம் கும்பிட்டு இருப்போமா? அல்லல்படும் அப்பாவி மக்களையும் உங்கள் வாழ்க்கையில் ஒரு தடைவையாவது நினைத்து பாருங்கள்.

வருது பெப்ரவரி 14. உதையெல்லாம் நாங்க ஏன் கவனிக்கோணும்? நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. திருத்தமுடியாத பிறவிகள் நாங்கள்........


5 comments:

பெயரில்லா சொன்னது…

be careful when u r writing these articles........:(

கார்த்தி சொன்னது…

நன்றி நண்பா! நான் எதுவும் இல்லாததை சொல்லவில்லையே பயந்தது போதும். உண்மையை உரக்க கூறுவோம்

பெயரில்லா சொன்னது…

நாங்கள் சபிக்கப்பட்டவர்கள்.......

பெயரில்லா சொன்னது…

எங்களுக்குரியதை யாரும் தரபோவதில்லை நாங்களாகதான் எடுத்துகொள்ளவேண்டும்....

Nantharupan சொன்னது…

நாங்கள் செய்யவேண்டியதை
அந்த நேரத்தில் தவறிவிட்டோம்!!!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்