
வணக்கம் நண்பர்களே! காலை
விடிந்ததும் அன்றும் வழமைபோல் வேறு தொழிலில்லாது
வெள்ளி(?) பார்த்துக்கொண்டிருந்தபோது, சமயம் பார்த்து அந்த Gapல எனது புலொக்கின் பெயரை புல்லுருவிகள் யாரோ கடாசிவிட்டார்கள். படுபாதகர்கள்!!! தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அதுவும் விரும்பி சேர்ந்தல்லவா ஓடிவிட்டதாம்.

என்ன செய்யிறது அதுக்காக ஊரை கூட்டி ஒப்பாரியா வைக்கமுடியும். ஒண்டு போனால் என்ன? இன்னொண்டு ஆப்பிடாமலா போயிடும். அதுக்கிடேலேயே இன்னொன்றை பிடிச்சிட்டமில்ல. அவனவன் என்னத்த என்னத்தயெல்லாம் மாத்துறான். நாங்க இதயாவது மாத்த வேண்டாமா? ஒன்றையே கனக்கநாள் வைச்சிருந்தா அலுப்புத்தானே அடிக்கும்.

So இத்தால் யாவருக்கும் சொல்லிக்கொள்வது என்னெண்டால் இதுவரை காலமும் விடிவெள்ளி என்ற பெயரில் உங்களுக்கு
விடிவை தராது உதித்த
வெள்ளி இன்று முதல் அலேக்காக கட்டப்பட்டு ”
பொட்டலம்” ஆக உங்கள் கைகளில்.. (இது நிச்சயமாக அந்த பொட்டலம் இல்லை.) வழமைபோல் இதிலேயும் நல்லதுகள், கெட்டதுகள், குப்பைகள், சப்பைகள், கஞ்சல்கள், கெஞ்சல்கள், மிச்சங்கள், சொச்சங்கள், பொரியல்கள், பிரட்டல்கள் எல்லாம் சேர்ந்து உங்களுக்காக
பொட்டலம் கட்டப்படும். சில புதுமைகள் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும்.
மீண்டும் சந்திப்போம்.
6 comments:
போட்டலமா? பரவாயில்லை, உடனடியாகப பதிவுகளை வாசிக்க முடியாவிட்டாலும் வீட்டுக்கு எடுத்துச்சென்று வாசிக்க இலகுவாக இருக்கும்.
//Subankan கூறியது...
போட்டலமா? பரவாயில்லை, உடனடியாகப பதிவுகளை வாசிக்க முடியாவிட்டாலும் வீட்டுக்கு எடுத்துச்சென்று வாசிக்க இலகுவாக இருக்கும்//
வழிமொழிகிறேன்....
ஹி ஹி......
சுபாங்கன் நல்லாத்தான் இங்கிலிசு படிச்சிருக்கிறீங்க!!
நன்றி கனககோபி..
அன்பின் பதிவர்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர்களின் இரண்டாவது சந்திப்பு சம்மந்தமாக இங்கே சென்று விபரங்களை அறிந்து உங்கள் வருகையை உறுதிப்படுத்த அங்கே பின்னூட்டமொன்றை இட்டுவிடுங்கள். நீங்கள் வெளிநாட்டிலுள்ள இலங்கைப் பதிவராயின் நேரடி ஒளிபரப்புப் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - அமைப்புக் குழு
அழைப்புக்கு நன்றி... நானும் வாறன். ஜமாய்ப்போம்!!!
//அவனவன் என்னத்த என்னத்தயெல்லாம் மாத்துறான். நாங்க இதயாவது மாத்த வேண்டாமா? ஒன்றையே கனக்கநாள் வைச்சிருந்தா அலுப்புத்தானே அடிக்கும்//
மிக அருமையான தத்துவம் ............. :)
கருத்துரையிடுக