ஒரு கல் ஒரு கண்ணாடி (OKOK Double OK) - திரைப்பார்வை

ஒரு கல் ஒரு கண்ணாடி சிறு பட்ஜெட் நட்சத்திர ஹீரோ இல்லாத படங்களுக்கும் எதிர்பார்ப்பு பிச்சுக்கிட்டு எகிறும் படங்களில் இதுவும் ஒன்று. இப்படியான படங்களுக்கு இயக்குனரின் மேலுள்ள நம்பிக்கைதான் முக்கிய காரணமாக பெரும்பாலும் இருந்துவிடுவதுண்டு. இந்தப்படத்தில் இயக்குனர் ராஜேஷிடம் உள்ள நம்பிக்கைக்கு மேலதிகமாக காமெடியன் சந்தானத்தின் மேலுள்ள நம்பிக்கைதான் உச்சபட்சமாக இருந்ததென்பது வெளிப்படை.


சந்தோஷ் சுப்ரமணியம் படத்திற்கு பின்னர் ராஜா-I திரையரங்கு யாழ்ப்பாணத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை பார்த்தேன். ராஜா-IIல் போடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் போன எனக்கு புதுவருடத்தில் 2வது பெரிய்ய பல்ப்பு. எதிர்பார்த்ததைவிட ராஜா-Iஇல் sound system நல்லாகவே இருந்தது. ராஜா-IIல் நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பிறகு இன்னோர் படம்வாயப்பு தவறிப்போனது.

சிவா மனசில சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற காமெடிகலட்டா வெற்றிகளை கொடுத்த ராஜேஷ் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் தனது ஹாட்றிக் வெற்றியை கொடுத்து விட்டார். என்னை பொறுத்தவரை தனது முதல் 2படத்தையும் விட இதில் சூப்பராக காமெடிகளை அள்ளி கொட்டியுள்ளார் இயக்குனர். படத்தின் பெரிய்ய மைனஸ் பாயிண்டாக இருக்கலாம் எனக்கருதப்பட்டவர் படத்தின் அறிமுக ஹீரோ உதயநிதி ஸ்டாலின். ஆனால் படத்தின் ஆரம்ப ஒரு பாடல்காட்சியில் (ஆட வேண்டிய) மட்டுமே கொஞ்சம் தடுமாறியிருந்தாலும்/ முதிர்ச்சியில்லாமலிருந்தாலும் பின்னர் பாடல் மற்றும் காமெடிக்காட்சிகளில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கலைஞரின் குடும்பத்திலிருந்து அருள்நிதியை தொடாந்து இன்னொர் யாதார்த்தமான ஹீரோ வந்துவிட்டார்.


ஒரு யாதார்த்த / sentiment/ கதையம்சமுள்ள சினிமாவிலோ ஒரு இயக்குனர் தனது தனி முத்திரையையோ அல்லது பலரால் பராட்டப்படக்கூடிய படத்தை தருவது மிகப்பெரிய்ய கஸ்டமான விடயமாக இருக்காது. ஆனால் இப்பிடிதான இருக்கும் என்று தெரிந்த கதையில் படத்தை சுவாரஸ்யமாக ஆரம்பம் முதல் இறுதிவரை தியட்டர் பூராகவும் கலகலப்பாக வைத்திருப்பதென்பது மிகவும் கஸ்டமான விசயமும் அதிலேதான் ஒரு இயக்குனரின் தனிதிறமையும் வெளிப்படுகிறது. தொடர்ச்சியாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதைக்களத்தை கொண்ட 3படங்களை வெற்றிகரமாக ரசிகர்கள் ரசிக்கும் படியாக கொடுத்த ராஜேஷக்கு பெரிய்ய சபாஷ். 


படத்தின் காமெடிக்கு சந்தானத்தின் வேலையே ஆகா ஓகோ. ஒவ்வொரு படத்திலும் என்னமா முன்னேறுகிறார் இவர். இவரும் உதயநிதியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளோ அய்யோ அய்யோ. எப்பவுமே இவர் வரும் காட்சிகளில் சிரிப்புகள் கைதட்டல்களும்தான். இவரின் டைமிங் காமெடிகளும் கலர்கலரான கண்ணுக்கு குத்தும் நிறங்களில் போட்டுவரும் dressகளும் சொல்லிவேலையே இல்லை. அத்துடன் உதயநிதிக்கு அம்மாவாக வரும் சரண்யா. வழமையையும் விட மேலாக பின்னிபிடலெடுத்துவிட்டார். அம்மா வேடமென்றால் கூப்பிடுங்கள் சரண்யாவை என்பது இப்போது தமிழ் சினிமாவில் மாற்றமுடியாதது என்றாலும் மற்றபடங்களையும் விட மேலதிகமாக தனது முகபாவங்களினூடாக காமெடிகளில் ரசிக்கவைக்கிறார் சரண்யா. சந்தானம் உதயநிதிக்கு அடுத்ததாக சரண்யாதான் நடிகர்களில் அடுத்த பெரிய்ய பிளஸ்.

படத்தின் ஹீரோயின் ஹன்சிகா முந்தைய படங்களைவிட இன்னும் குண்டாக தெரிகிறார். சின்னத்தம்பியில வந்த குஸ்பு என்று வேறு படத்தில் கூட சொல்கிறார். So ஹன்சிகா ரசிகர்களின் எதிர்ப்பை பெறமால் அப்பிடியே செல்கிறேன். படத்தில் ஆர்யா சினேகா அண்ட்ரியா guest actorsஆக வருகின்றனர். படஎழுத்தோட்டத்தில் யுவன்சங்கர்ராஜாவிற்கும் நன்றி என்று போட்டமைக்கு சிவா மனசில் சக்தி படத்தில் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” பாடலை எழுதியவர் யுவன் என்பதால்தானோ தெரியவில்லை. யாரும் உறுதியாக தெரிந்தால் உறுதிப்படுத்தவும். 


தனது முதல் இரு படங்களுக்கும் யுவனின் இசையை பெற்ற ராஜேஷ் முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜிடம் சென்றிருந்தார். உதயநிதி ஸ்டாலின் விருப்பத்தால் இந்த மாற்றம் வந்திருக்குமோ தெரியவில்லை. வழமைபோல பழையதை உல்டா பண்ணி பாடல்கள் வந்திருந்தாலும் அனேக ரசிகர்களின் ஆதரவை இப்பாடல்கள் பெற்றிருந்தன. என்றாலும் நண்பன் பாடல்கள் கொடுத்த பெரிய்ய தாக்கத்தை இந்தப்பாடல்கள் தவறவிட்டிருந்தமை உண்மை. ஆல்பத்தின் சூப்பர் ஹிட் பாடலான ”வேணாம் மச்சான் வேணாம் பாடல் சத்யம் படபாடல் ”பால் பப்பாளி” பாடலின் அதே மெட்டுமதான் என்பது குறிப்பிடத்தக்கது. பாடல்களை அழகாக காட்சிப்படுத்தியுமிருந்தார் இயக்குனர். பின்னணி இசையில் ஹாரிஸின் பங்கு இந்தப்படத்தில் முக்கியமில்லையென்றாலும் பின்னணி இசை சொல்லும்படியாக இருக்கவில்லை.

ஒரு நல்லவொரு காமெடிபடம்பார்த்து கவலைகளை மறந்து சிரிக்கவேண்டுமா உடனே ஓடுங்கள் ஒரு கல் ஒரு கண்ணாடி திரையிடும் திரையரங்குகளை நோக்கி. 
மொத்தத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி = OKOK Double OK 

3 (முன்னோக்கி) - திரைப்பார்வை

விஜயின் அப்பா SA.சந்திரசேகர் செய்த புண்ணியத்தால கனக்க காலத்துக்கு பிறகு ஒரு பெரிய்ய ஹீரோவின்ர படம் பாக்கிற வாய்ப்பு கிடைத்தது ”3” படம் மூலம். அவரின்ர புண்ணியத்திலதான் படம்பாத்து விமர்சனம் எழுதுற வெட்டிவேலை இல்லாமல் இருந்தது சந்தோசமாவும்தான் இருந்திச்சு. 


தனுஷின் மனைவி படம் இயக்குகிறார் என்றதாலோ தனுஷ் நடிக்கிறார் என்றதாலயோ கிடைக்காத எதிர்பார்ப்பை உலகமே எதிர்பார்க்காத பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்ததென்னவோ இந்த ”வை திஸ் கொலவெறி” என்ற பாட்டுதான். இப்பிடி ஒரு படம் வருகின்றதென்பதே அந்த பாட்டடைக்கேட்ட பிறகுதான் பலருக்கு தெரிந்திருந்தது. யாரும் எதிர்பாராத விதமாக ஒரு படத்துக்கு செய்ய வேண்டிய புறமோசன் வேலைகளையெல்லாம் தனியாளாக நிண்டு ஏலவே செய்து முடித்திருந்தது Why This Kollaveri பாடல். படம் என்ன கேவலமாக இருந்தாலும் படத்தின் ஓப்பினிங் இந்த பாடலால் பிச்சுக்கொண்டு போகுமெண்டு பிறந்த குழந்தைக்கு கூட தெரிந்திருந்தது. 

ஆனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இப்பிடி எகிறியமை ஒரு பக்கம் அட்வாண்டேச்சா இருந்தாலும் அதாவது போட்ட முதலுக்கு மோசமில்லாமல் இருக்கிறத ஓப்பினிங் பார்த்து கொண்டாலும் மற்றபக்கம் அறிமுக இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷிற்கு நிச்சயம் பெருத்த தலையிடிதான். கொஞ்சம் சொதப்பினாலும் குப்பையில் எறிந்து விடும் நிலையில்தான் கொலவெறி ரசிகர்கள் இருந்தார்கள். உண்மையில் Trailer பாக்கமுதல் நான்கூட இந்தப்படம் சும்மா புஸ்வாணமா போயிடும் எண்டுதான் நினைத்திருந்தேன். 2வது trailer பாத்த பிறகுதான் பறுவாயில்லாமல் இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை வந்திச்சு. 

ஆனால் எதிர்பாத்ததுக்கு மேலதிகமாக நல்லவொரு படத்தை பாத்த திருப்தியை வழங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். Trailerலிலேயே செல்வராகவனின் படங்களின் பாதிப்பு இதில் பிரதிபலிக்கும் என ஊகித்திருந்தாலும் ஏன் படத்தில் கூட அது சில இடங்களில் தெரிந்திருந்தாலும் கூட அறிமுக இயக்குனர் என்ற ஒரு தோற்றப்பாடு இந்தப்படத்தில் தெரியவில்லை. இந்த படத்துக்கு Censor board எப்பிடி U சான்றிதழ் கொடுத்தாங்கள்? எப்பிடி யோசிச்சாலும் தெரியல. U/A சான்றிதழ் கொடுத்திருக்கவேண்டும்.


தனுஷ் இதில் சொல்லி வேலையில்லை. வரவர இவரின் நடிப்பு தேர்ச்சி கூடிக்கூடிக்கொண்டே போகுது. கிட்டத்தட்ட மயக்கம் என்னவில் வெளிப்படுத்திய திறமையை போன்ற ஒரு களமென்பதால் தனுஷ் புகுந்து விளையாடியிருக்கிறார். தனது 2011ல் கிடைத்த தேசிய விருதுக்கு தான் பொருத்தமானவன்தான் என்பதை நிருப்பித்துகொண்டே வருகிறார் இவர். அடுத்து சிவகார்த்திகேயனும் இதில் முக்கிய நண்பன் பாத்திரமாக வந்து தான் வசனம் பேசும் நேரமெல்லாம் தியேட்டர் ரசிகர்களின் கைதட்டல்களை வாங்குகிறார். இதிலும் இவருக்கான வாய்ப்பு நுனிப்புல் மேய்ந்த பாணியில்தான் வழங்கப்பட்டிருக்கிறது. பார்ப்போம் இயக்குனர் எழிலின் மனம் கொத்தி பறவையிலாவது இவரின் முழுத்திறமையும் வெளிக்கொணரப்படுகிறதா என. 


அடுத்த முக்கியமானவர் ”மயக்கம் என்ன”விலும் அப்பாவி நண்பனா வந்த சுந்தர். பாவப்பட்ட நண்பர் வேடங்கள் இவருக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது. எதிர்காலத்தில் குணச்சித்திர வேடங்களில் இவரை பல படங்களில் இவரை பார்க்கலாம். எனக்கு இந்த படத்தின் முதலாவதும் கடைசியுமான (-)Negative aspect ஸ்ருதிஹாசன்தான் இரட்டை பின்னல் போட்ட பாடசாலைக்காட்சிகளில் ஆம்பிளைக்கு பெண் வேஷமிட்டது போல தெரிகிறார். அதோடு அதே 7ம் அறிவில் பாத்த சப்பென்ற நடிப்பு(?). பிடிக்கவில்லை எனக்கு நல்லா முன்னேறணும் கண்ணு. 

சவுண்ட் எபெக்ட்டிற்காக Why this kollaveriன் வெற்றியின்பின் ரசுல் பூக்குட்டியும் இந்த படத்தில் சேர்த்து பணியாற்றியிருந்தார். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருந்தாலும் பல பாடல்கள் 3நிமிட பாடல்களாக இருந்ததால் அதன் சுவையை அனைவராலும் பூரணமாக சுவைக்க முடியாமல் போயிருந்தமை கவலையான விடயமே. எல்லா பாடல்களையும் குறைந்தளவு 4 1/2 நிமிடங்களாவது எடுத்திருக்கலாம். முதல் படத்திலேயே இவ்வளலு Maturity காட்டிய அனிருத் பாராட்டப்பட வேண்டியவர். Why This Kollaveri பாட்டை 2கோடி செலவில் எடுத்தோம் என்று படக்குழு பீத்தியிருந்தாலும் காட்சியை பாக்க போனால் வெறும் 50ஆயிரத்திலேயே முடித்திருப்பார்கள் போலதான் தெரிகிறது. எதிர்பாத்த உச்ச அளவுக்கு இந்த பாடலை படமாக்கவில்லை என்பது எனது கருத்து. 

மொத்தத்தில் ”3” மூணு முன்னுக்கே போயி தியட்டரில பாக்ககூடிய படம் Love + Thriller Movie. 

பிரபலமாகாத நல்ல படங்கள்-I - சனிக்கிழமை சாயங்காலம் 5மணி

ஒவ்வொரு வருடமும் பெரிதாக ஆர்ப்பாட்டமில்லாமல், விளம்பரமில்லாம் வரும் படங்களில் நாலைந்து தரமான நல்ல படங்களாக இருப்பது வழமை. அப்படியான படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் பேசப்படாமலே போய்விடுவது துரதிர்ஷ்டமே. அப்படியான பெரிதாக அறியப்படாத படங்களை பற்றி எனது பார்வையை சிறிதாக தருவதே இந்த தொடர் பதிவின் நோக்கமாகும். இதில் நான் பகிரப்போகும் படங்கள் கனக்க காலத்திற்கு முதல் வந்த படங்களாக இருக்கலாம். எனினும் நிறைய பேருக்கு போய் அந்த படங்களைப்பற்றிய தகவல்கள் போய் சேரவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த தொடர் பதிவை ஆரம்ப்பிக்கிறேன்.


பெரிதாக புறொமசன்கள் + ரசிகர்கள் மத்தியில் பெரிய்ய எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்கள் இப்போதெல்லாம் பெரும்பாலும் சொதப்பிவிடும் நிலையில் அறிமுகமேயில்லாத அறிமுக நடிக, நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடனும் வரும் ஒரு சில படங்கள் எங்களை ஆகா ஓகோ போடச்சொல்லிவிடும். மனதில் லபக்கென்று பதிந்துவிடும். இப்படியான படங்களுக்கு முதலில் தியட்டரில் ஆட்களே இருக்காது. பின்னர் பார்த்தவர்களின் வாய் வழி தகவல்கள் மூலம் கவரப்பட்டு சனம் கொஞ்சம் கொஞ்சமாக கூடி சில நேரங்களில் அப்படம் நல்ல ஹிட் படமாக கூட மாறிவிடும். அப்படியான படங்களுக்கு உதாரணமாக மௌனகுரு, பசங்க, நாடோடிகள் போன்றனவற்றை குறிப்பிடலாம். ஆனால் பரிதாபமான விடயம் என்னவென்றால் இப்படியான சில படங்களளைப்பற்றிய கருத்துக்கள் மக்களுக்கு போய் சேரமுதல்லே தியட்டரிலிருந்து தூக்கப்பட்டு விடும். ஆரண்யகாண்டம், டூ, ஈரம் போன்ற படங்கள் இவற்றில் இரண்டாவது வகை.


இந்த தொடர் பதிவில் பெரும்பாலும் 2ம் வகைப்படங்கள் பற்றியே பேசப்படும். இப்படி 2010ன் இறுதியில்வந்த படம்தான் இந்த ”சனிக்கிழமை சாயங்காலம் 5மணி”. இப்பிடியொரு படம் வந்ததென்று எனக்கு படம் பாக்கும்வரை தெரியவே தெரியாது. ஒரு நண்பன் ”நல்ல படம் இரவில பாக்க இன்னும் நல்லா இருக்கும்” எண்டு  சொல்லி தந்தான். ஒரு 5 நிமிடம் கழிந்தபோதே விளங்கியது படம் மக்ஸிமமா போகப்போகுதெண்டு. கடந்த கிழமைகள் கடுமையான உடல் அலுப்பிலிருந்தபோதும் இரவு 10மணிக்கு தொடங்கிய படத்தை நிறுத்த மனமின்றி முழுவதும் பார்த்துவிட்டுதான் அன்று நித்திரைக்கு சென்றேன். 

படம் ஆரம்பிக்கும்போதே கொஞ்சம் வித்தியாசமாகதான் ஆரம்ப்பித்தது ஒரு செட்டில எடுத்த பாடலுடன் ஆரம்பித்தது படம். வழமையா படம் எப்பிடி எடுக்கப்பட்டது என்ற காட்சிகள் படம் முடிந்தாப்பிறகே போடுறது வழமை . இதில் இந்த முதல் பாடலுக்கிடையில் இடக்கிடை போட்டார்கள். அதோடு தங்களின் முதல் படைப்பான மதுரை TO தேனீ - வழி ஆண்டிப்பட்டி படத்தின் வெற்றிக்கு நன்றிகள் போட்டார்கள். (அந்தப்படம் வெற்றியோ வெற்றியில்லையோ எனக்கு தெரியாதுங்க). அந்த படத்தின் இயக்குனர் ரதிபாலா இதில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார். புதுமுக நாயக நாயகி சரத், மாலதியும் அறிமுக இயக்குனர் ரவிபாரதியும் சேர்ந்து உருவாக்கியிருந்தனர் இந்தப்படத்தை.


கிராமத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை திரில்லிங்கோ திரில்லிங். City life கதையில்தான் இப்படியான thrill கதைகள் தரமுடியும் என்ற நம்பிக்கையை தகர்த்திருக்கிறார் இயக்குனர். ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தின் சுவாரஸ்யம் குறையாமா படத்தை smoothஆக கொண்டு செல்லும் இயக்குனரை தூக்கி கொண்டாடலாம். படத்தில் என்ன நடக்கின்றது ஊகிக்கவே முடியாது. படம் ஆரம்பித்ததிலிருந்து நீங்கள் கதிரை நுனியிலிருந்து பாக்ககூடிய ஒரு படம். படத்தின் இறுதி 10நிமிடங்களிலேயே முடிச்சுக்களை அவிழ்க்கின்றார் இயக்குனர். நான் இதுவரை பார்த்த திரில் படங்களில் இதற்கும் முக்கிய ஒர இடம் கிடைத்து விட்டது.


படத்தில் பெரும்பாலானோர் புதுமுகங்கள்தான். (சரத்தின் அம்மா தவிர்த்து) ஆனால் பொறுப்பறிந்து பின்னியிருக்கிறார்கள். அனைவரும் இயல்பாக நடித்திருப்பது படம் பார்க்கிறோம் என்ற ஒரு தோற்றப்பாட்டை இல்லாமல் செய்திருந்தது. முக்கியமாக ஆரம்பத்தில் வரும் அந்த பொலிஸ் நன்றாக சாதாரணமாக நடித்திருந்தார். வக்கீல் பொலிஸ் ஸ்டேசனுக்கு வந்து சரத்தை மீட்கும் காட்சி, பெண்ணின் வீட்டில் வந்து சண்டை பிடிக்கும் உறவினரின் காட்சி ஆகியன இந்தப்படத்தின் reality காட்சிகளின் முக்கியமானவை. இதில் எனக்கு சொதப்பியிருப்பது போல தோன்றுவது நாயகன் சரத்தான். இன்னும் perform பண்ணியிருந்திருக்கலாம். 

இப்பிடியொரு தரமான படத்தை எப்பிடி இவ்வளவுகாலம் மிஸ் பண்ணினேன்?  இதுதான் இப்பொழுது என்னில் எழும் கேள்வி. பாக்காதஆக்கள் கட்டாயம் பாருங்க சார். திரில் பட ரசிகரா உங்களுக்கும் நிச்சயம் இந்தப்படம் பிடிக்கும். அப்பிடி பிடிக்கேலனா சொல்லுங்க. நான் புளொக் எழுதுறதே விட்டுடுறன். :பி

மொத்தத்தில் சனிக்கிழமை சாயங்காலம் 5மணி = மணிப்படம்

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்