திரை தகவல் பெட்டகம்-I
இந்திய திரைப்படங்களிலுள்ள எனக்கு தெரிந்த சில விசயங்களை பகிர இந்த தொடர்பதிவு ஆரம்பிக்கப்படுகிறது. பெரும்பாலும் திரைஇசை பற்றிய தகவல்கள் இதில் தொடர்ச்சியாக வரும்!
ஞானப்பழம் திரைப்படத்திலுள்ள ”யாருமில்லாத தீவொன்று வேண்டும்” என்ற இந்த பாடலுக்கு யார் இசையமைப்பு என்று கேட்டால் இது நிச்சயம் A.R.RAHMAN னுடையதாகத்தான் இருக்கவேண்டுமென கூறுவோர்தான் ஏராளம். காரணம் இந்தபாடலிலுள்ள Melodyன் இனிமைதன்மை அந்தகால இசைப்புயலின் பாடலின் சாயலில் இனிமையாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே இந்த பாடலின் இசையமைப்பாளர் ஒரு சகலகலாவல்லவர். நடிப்பு கதை திரைக்கதை இயக்கம் தயாரிப்பு என்று TR ஐ போலவே பல துறைகளில் கொடிகட்டிபறந்தவர். இவரது படங்கள் பலராலும் ரசிக்கப்படுபவை. ஒரு நக்கல் நையாண்டி நகைச்சுவையுடன் நல்ல கருத்தையும் கொண்டு அமைபவை. ஒரு திருட்டுமுழியுடன் கண்ணாடியையும் போட்டுக்கொண்டு 80களில் கலக்கியவர். இவரது மகனும் நாயகனாக சக்கரைக்கட்டி படத்தில் அறிமுகமாகியுள்ளார். பாரிஜாதம் படத்தில் மகளும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இப்போது நீங்கள் இலகுவாக பிடித்திருப்பீர்கள் அவர் வேறுயாருமல்ல K.பாக்கியராஜ்.
இப்பாடலின் இசைக்கு சொந்தக்காரர் K.பாக்கியராஜ் என்று எனக்கு வானொலி மூலமே அறிய கிடைத்தது. பலருக்கு அது தெரிந்திராமலிருக்கலாம். அதுதான் பகிர்ந்து கொண்டேன். இந்த வீடியோ பாடலை தேடும்போது கானபிரபா அண்ணா இவர் பற்றி ஏலவே பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. ஏற்கனவே எழுதி Draftல் வைத்திருந்தமையால் இதை பதிவுடுகிறேன். COPY பண்ணிவிட்டேன் என்று யாரும் கூறக்கூடாது அல்லவா! அவரின் பதிவை படிக்க இங்கே அமத்துங்கள் ==>
கீழேயுள்ள ”காதலர்தினம்” படபாடலான ”ஓ மரியா” பாடல் இப்பாடகருக்கு அறிமுக பாடலாகும். இசைப்புயல் ரகுமானால் அறிமுகமாகிய பெருமையை பெற்ற இவர், இந்த பாடல் உள்ளடங்கலாக 3பாடல்கள் ரகுமானின் இசையில் பாடியுள்ளார். இவர் சிலபடங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். (பார்த்தீபன்கனவு, ஏகன்). எப்படியான பாடலை பாடினாலும் அதில் ஒரு கவர்ச்சி Stylish இருத்தல் மற்றும் ஆங்கில சொற்களை சாவசமாக உச்சரித்தல் என்பன இவருடைய சிறப்பாகும். பாடலை பார்த்தபின் யாரென்று கண்டுபிடியுங்கள்.
ஞானப்பழம் திரைப்படத்திலுள்ள ”யாருமில்லாத தீவொன்று வேண்டும்” என்ற இந்த பாடலுக்கு யார் இசையமைப்பு என்று கேட்டால் இது நிச்சயம் A.R.RAHMAN னுடையதாகத்தான் இருக்கவேண்டுமென கூறுவோர்தான் ஏராளம். காரணம் இந்தபாடலிலுள்ள Melodyன் இனிமைதன்மை அந்தகால இசைப்புயலின் பாடலின் சாயலில் இனிமையாக இருக்கும். ஆனால் உண்மையிலேயே இந்த பாடலின் இசையமைப்பாளர் ஒரு சகலகலாவல்லவர். நடிப்பு கதை திரைக்கதை இயக்கம் தயாரிப்பு என்று TR ஐ போலவே பல துறைகளில் கொடிகட்டிபறந்தவர். இவரது படங்கள் பலராலும் ரசிக்கப்படுபவை. ஒரு நக்கல் நையாண்டி நகைச்சுவையுடன் நல்ல கருத்தையும் கொண்டு அமைபவை. ஒரு திருட்டுமுழியுடன் கண்ணாடியையும் போட்டுக்கொண்டு 80களில் கலக்கியவர். இவரது மகனும் நாயகனாக சக்கரைக்கட்டி படத்தில் அறிமுகமாகியுள்ளார். பாரிஜாதம் படத்தில் மகளும் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.
இப்போது நீங்கள் இலகுவாக பிடித்திருப்பீர்கள் அவர் வேறுயாருமல்ல K.பாக்கியராஜ்.
இப்பாடலின் இசைக்கு சொந்தக்காரர் K.பாக்கியராஜ் என்று எனக்கு வானொலி மூலமே அறிய கிடைத்தது. பலருக்கு அது தெரிந்திராமலிருக்கலாம். அதுதான் பகிர்ந்து கொண்டேன். இந்த வீடியோ பாடலை தேடும்போது கானபிரபா அண்ணா இவர் பற்றி ஏலவே பதிவிட்டிருந்தது தெரிய வந்தது. ஏற்கனவே எழுதி Draftல் வைத்திருந்தமையால் இதை பதிவுடுகிறேன். COPY பண்ணிவிட்டேன் என்று யாரும் கூறக்கூடாது அல்லவா! அவரின் பதிவை படிக்க இங்கே அமத்துங்கள் ==>
கீழேயுள்ள ”காதலர்தினம்” படபாடலான ”ஓ மரியா” பாடல் இப்பாடகருக்கு அறிமுக பாடலாகும். இசைப்புயல் ரகுமானால் அறிமுகமாகிய பெருமையை பெற்ற இவர், இந்த பாடல் உள்ளடங்கலாக 3பாடல்கள் ரகுமானின் இசையில் பாடியுள்ளார். இவர் சிலபடங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். (பார்த்தீபன்கனவு, ஏகன்). எப்படியான பாடலை பாடினாலும் அதில் ஒரு கவர்ச்சி Stylish இருத்தல் மற்றும் ஆங்கில சொற்களை சாவசமாக உச்சரித்தல் என்பன இவருடைய சிறப்பாகும். பாடலை பார்த்தபின் யாரென்று கண்டுபிடியுங்கள்.
அவர்தான் பாடகர் தேவன். இதில் இவருடன் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனும் சேர்ந்து பாடியுள்ளார். கண்டுகொண்டேன் திரையில் ‘ஸ்மாயியாயி‘ பாடலும் அண்மையில் வெளியான ‘அன்பில் அவன்‘ பாடலும் மற்றைய இருபாடல்களாகும்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Share
என்னைப் பற்றி

- கார்த்தி
- ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!
Catch me on Facebook
*பார்வைகள்*
3தரம் யூத்ஃபுல் விகடனில்
என்ன கொடுமை

நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்
0 comments:
கருத்துரையிடுக