திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா)

Composer Vidyasakar
இசையமைப்பாளர் தமனின் வளர்ச்சி உண்மையில் class இசையமைப்பாளர் வித்தியாசகரின் வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கின்றது என்பது   (வித்தியாசாகரின் தீவிர ரசிகராக இருந்தும் கூட) ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இதற்கு சான்று பகர்வதுபோல் தனது ஆஸ்தான இசையமைப்பாளராக இவ்வளவு காலமும் உபயோகித்து வந்த வித்தியாசாகரை இயக்குனர் தரணி முதல்முறையாக ”ஒஸ்தி” படத்தில் கழற்றி இளம்இசையமைப்பாளர் தமனிற்கு வாய்ப்பளித்திருந்தார். அதேபோல் தனது முதலிரு படங்களான ”ஜெயம்கொண்டான்”, ”கண்டேன் காதலை” போன்றவற்றிற்கு வித்தியாசாகரை மெட்டுபோடவைத்த இயக்குனர் கண்ணன் "வந்தான் வென்றான்"இற்கு தமனுக்கு வாய்ப்பளித்திருந்தார். தமிழ்சினிமாவில் வித்தியாசகரின் மெட்டுக்கள் யாராலும் இலகுவில் மறந்துவிடமுடியாத ஒன்றாக இருந்தாலும்கூட, அவர் இறுதியில் இசையமைத்த ”தம்பிவெட்டோத்திசுந்தரம்” ”இளைஞன்” ”சிறுத்தை” ”காவலன்” போன்ற அல்பங்களில் தனதுதனி முத்திரையை வழமைபோல் பதிக்க தவறிவிட்டார் என்று கவலையுடன் ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

Composer Thaman
மேலே குறிப்பிட்ட படங்களில் நல்ல பாடல்கள் இல்லை என்று நான்சொல்லவில்லை. ஆனால் வித்தியாசாகரின் பாணியிலான பாடல்கள் மிகவும் குறைவு. காவலன் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் வித்தியாசாகரின் தனித்துவ பாடல்கள் அதில் மிஸ்ஸிங்தான். எனினும் வெட்டோத்திசுந்தரத்தில் ”நேற்று இல்லை இல்லை இந்த ஆனந்தம்” பாடல் வித்தியாசகரின் பலமான மெலடியை மீண்டும் நினைவூட்டியிருந்தது. ஆனாலும் மற்றைய பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இறுதியாக தனது Formஐ நிரூபித்த அல்பமாக இருந்தது ”மந்திரப்புன்னகை”தான். மற்றைய மேலே குறிப்பிட்ட அல்பங்களில் அவரின் தனிமுத்திரை மிஸ்ஸிங்தான்.
------------------------------------------------------------------------------

இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம். பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான்.
Singer Solar Sai
தனது முதல்வாய்ப்பின்பும் ஹாரிஸ்ஜெயராஜ் வாரணம் ஆயிரத்தில் ”யெத்தி யெத்தி யேத்தி” மற்றும் ”கோ”வில் ”அக நக” என்ற இரு பாடல்களிலும் தனிக்குரலாக இல்லாமல் மற்றைய பாடகர்களுடன் சேர்ந்து பாடவைத்தார். அண்மையில் ஒஸ்தியிலும் ”கலாசலா கலசலா” பாடலிலும் இவரது குரல் வந்திருந்தது. ஆனால் வெளியில் LR.ஈஸ்வரி,  TR.ராஜேந்தர் பாடிய பாடல்என்று பேசப்பட்டமையால் இவரது பெயர் இந்தபாடலிலும் வெளியே தெரிந்த பாடாக இல்லை. உண்மையில் இந்த பாடலில் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் வரும் ஆண்குரல் சோலர் சாய்க்குரியது. அதாவது படத்தில் சோனுசூட் பாடும் நேரத்தில் வரும் குரல்.
------------------------------------------------------------------------------

”எங்கேயும் எப்போதும்” படம்தான் இசையமைப்பாளர் சத்யாவின் முதல்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறுசிலரோ ”சேவற்கோடி”தான் முதல்படம் என்கிறார்கள். ஆனால் இரண்டும் பிழை. சத்யாவின் இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம்தான் ”எங்கேயும் எப்போதும்”. சேவற்கொடி பாடல்கள் வந்து பிரபல்யம் அடைந்ததோ தவிர படம் இன்னும் வெளியாகவில்லை. இவை எல்லாத்துக்கும் முன்னதாக சத்யாவிற்கு இவ்விரண்டு வாய்ப்புக்களை வழங்கியது ”சில்லென்று ஒரு காதல்” புகழ் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இன்னும் வெளிவராமல் இருக்கும் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படபாடல்கள்தான்.

Composer Sathya
பரத்வாஜ், சிற்பி, பாலபாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக உருவாகியது இயக்குனர் கிருஷ்ணாவின் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படம்மூலமாகதானாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் இதை நான் அறிந்துகொண்டேன். இந்தபாடல்களை கேட்டுத்தான் ”சேவற்கொடி” ”எங்கேயும் எப்போதும்” வாய்ப்புக்களை இவருக்கு வழங்கியுள்ளார்கள். இவரின் 3வது படம்தான் எங்கேயும் எப்போதும். ஆனால் மற்றபடங்கள் இன்னும் வராததால் Debutant Composer and MovieDirectorன் படம் எங்கேயும் எப்போதும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது பிழை.

முந்தைய பாகங்களுக்கு
I  II  III  IV  V  VI 

7 comments:

Unknown சொன்னது…

ம்ம்ம் தகவல்கள் புதுசு!

shabi சொன்னது…

thullatha manamum thullum padatthil varum megamai vanthu pohiren paadalai paadiyathu yaarennru sollamudiyuma

கார்த்தி சொன்னது…

ராஜேஷ் என்ற பாடகர் பாடியிருந்தார். அவர் விஜயின் தூரத்து சொந்தம் என்று யாரோ சொல்ல கேள்விப்பட்டிருக்கேன். உண்மையோ சரியாக தெரியாது.

எப்பூடி.. சொன்னது…

வித்யாசாகர் பற்றி சொல்வதென்றால் நிறைய இருக்கு, இன்றைய இளைஞர்களில் பலருக்கு வித்யாவின் பாடல்களும், அவற்றின் இனிமையும் புரியாது, எனக்கு என்றைக்கு இளையராஜாவுக்கு அடுத்து வித்யாசாகர்தான். முன்னணி நாயகர்களில் கிட்டத்தட்ட எல்லோரது திரைப்படங்களுக்கும் இசையமைத்த வித்யாசாகர் சூர்யா, ஆரியா இருவருக்கும் இசையமைக்காதது ஒரு குறை போலவே எப்போதும் மனதில் தோன்றுகின்றது, அந்த குறை நிறைவேற சாத்தியமும் குறைவே........

ARV Loshan சொன்னது…

எப்பூடி சொன்ன கருத்தோடு அப்பிடியே ஒத்துப் போய்கிறேன்..
கார்த்தி நீங்கள் சொன்ன படங்களிலும் வித்யாசாகர் தனது இசையிலும் பாடல்களிலும் குறை வைக்கவில்லை.

சிறுத்தையில் 'ஆராரோ' பாடலின் சாம்பிள் போதும்...

தாரணி வித்யாசாகரைக் கழற்றியது கவலையே..

சொலார்சாய் ஆதித்யனின் பல ரீமிக்ஸ் பாடல்கள் மூலமாகத் தான் பிரபலமானார். அவருக்குத் தொடர்ந்து இப்படித் துக்கடா வாய்ப்புக்கள் தான் வரப் போகின்றன. பாவம்

சத்யா பற்றிய தகவல் புதிது :)

ம.தி.சுதா சொன்னது…

கார்த்தி மிகவும் ரசித்துப் படிக்கும் தொடர் இது...

சத்யாவின் விசயம் எனக்கும் புதிசு தான்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

ம.தி.சுதா சொன்னது…

வித்தியாசகரின் டுயட் பாடல்களுக்கு எந்தக் காலத்திலும் தனி மாதிப்பு இருக்கும் என்பது என் கருத்து...

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்