சுவாரஷ்ய பதிவர் விருதும்-குரங்கின் கை பூமாலையும்

அண்மைக்காலமாக வலைப்பதிவுகளில் பரவிவரும் கொடிய தொற்று நோய்களில் ஒன்றான சுவாரஷ்ய பதிவர் விருது (Interesting Blog) எனக்கும் இரு அன்பர்களால் பரப்பப்பட்டுவிட்டது. சுவின் புளு (Swine Flu)ஐ விட வேகமாக தொற்றும் இந்நோய் எங்கு போய் முடியபோகிறதோ தெரியவில்லை. விருதைபெறும் ஒருவர் அதை கிட்டதட்ட 6பேருக்கு கொடுக்கலாம் என்ற எழுதப்படாத விதியின் மூலம் என்னை போன்ற குரங்குகள் கையிலும் சில வேளை பூமாலைதான்.


இதை பெற எனக்கு தகுதிஇருக்கா இல்லையா என்ற ஆராய்சியின் (எனக்கே தெரியும் இது எனக்கு ரொம்பவே ஓவர்) மூலம் தகுதி இருப்பதுபோலான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயலாமல், மற்றவர்கள் என்ன செய்தார்களோ அதைபோலே நானும் ஊரோடு ஒத்து ஓடுகிறேன். ஆனால் இப்படியான பாராட்டுக்கள்தான் ஒருவருக்கு நல்ல உந்து சக்தியை கொடுக்கும் என்பதில் மாற்றுகருத்துக்கு இடமில்லை. நாங்களும் விருதின் படத்தை Blogல போட்டுட்டமில்ல...


இந்தபதிவு தேவையற்ற ஒன்றாக இருந்த போதிலும், சிலரை பாராட்டுவதற்காக பதிகின்றேன்.

விருதை வழங்கிய சுபாங்கன், கரவைக்குரல் இருவருக்கும் கோடி நன்றிகள்.

இவர்களில் சுபாங்கன் எனக்கு பழக்கமானவர். பல்கலைகழகத்தில் எனது கனிஷ்ட மாணவன். ஐந்தறைப்பெட்டி என்ற வலைப்பதிவு மூலமாக பல சுவாரஷ்யமான தகவல்களை தருபவர். இலங்கையிலுள்ள முன்னணி பதிவர்களில் மிக முக்கியமானவர். சிறந்த தொழில்நுட்ப பதிவாளர். இவரது பதிவுகள்மூலம் பலவற்றை அறிந்தவர்களில் நானும் ஒருவன்.

அடுத்தவர், கரவைக்குரல். உண்மையை சொல்ல போனால் எனக்கு பரிட்‌சையமற்றவர். வலைபதிவு மூலமே இவரை அறிகிறேன். எனது பதிவையும் இவர் பார்த்திருக்கிறார் என்பது விருதை வழங்கிய பின்பே எனக்கு தெரியும். ரொம்பவே மகிழ்சியாக இருக்கிறது. கரவையின் ஓசை, வாழ்த்தவரும் வானம்பாடி ஆகிய வலைபதிவுகளின் சொந்தகாரர். க‌ரவையின் ஓசை மூலம் பல தரப்பட்ட வித்தியாசமான பதிவுகளிடும் திறமையுடையவர். வாழ்த்தவரும் வானம்பாடி என்ற பதிவுமூலம் பல திறமைகளையுடைய ஈழத்து சொந்தங்களை வாழ்த்திவருகிறார்.

எனக்கு தரப்பட்ட இந்த நோயை(மன்னிக்கவும் விருதை) 6பேருக்கு அளிக்கவேண்டுமாம். இருந்தாலும் இருவருக்கு அளிக்கின்றேன்.
  1. முதலாமர் ஹிசாம் அண்ணா. வெற்றிFM வானொலியின் உதவி முகாமையாளர். இவரது வலைபதிவு Hisham Mohamed. நான் Blogஐ பற்றி அறிந்தபோது பார்த்த முதலாவது வலைபதிவு இவருடையதாகும். சிறந்த புரட்சிகரமான எழுத்துக்கு சொந்தமுடையவர். தற்போது இவரது எழுத்துக்கள் மிகவும் குறைவடைந்துவிட்டாலும் மீண்டும் புது உத்வேகத்துடன் எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
  2. அடுத்தவர் மயூரன் அண்ணா. சக்திFM வானொலியின் நீண்டகால அறிவிப்பாளர். வலைஉலகத்திற்கு புதியவர். MAYURAN என்ற வலைபதிவை எழுதி வருபவர். உலகத்தில் நடக்கும் எல்லா முக்கிய விசயத்தையும் முந்திக்கொண்டு பதிவிடுபவர். சின்ன சின்னதாக அளவான பதிவுகளில் அசத்துபவர். அடிக்கடி எழுதும் இவருக்கு எவ்வாறு நேரம் கிடைக்கிறதோ?
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒருமாதிரி விருதை Pass பண்ணியாச்சு!!!

6 comments:

சுபானு சொன்னது…

புற்றுநோய்தான் ஆனாலும் உந்துசக்தியைக் கொடுக்கும் அழகான புற்றுநோய்.. இரசியுங்கள்.
வாழ்த்துக்கள்..

கார்த்தி சொன்னது…

நன்றிகள் சுபானு :)

TamilhackX சொன்னது…

பாராட்டுக்கள் கார்த்திகன்
மேலும் உங்கள் சிறப்பான பணி தொடர வாழ்த்துக்கள்.

C.K.Mayuran சொன்னது…

உங்கள் விருதுக்கு நன்றி. உங்கள் பதிவுகள் தொடரட்டும்.

கார்த்தி சொன்னது…

@ TamilhackX
உங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உங்களது பக்கத்தையும் பார்த்தேன் .
கணணி சம்பந்தமான சிறப்பான பதிவுகள்.
தொடரட்டும் உங்கள் பணி

கார்த்தி சொன்னது…

@ C.K.Mayuran
சதமடித்ததுக்கு வாழ்த்துக்கள்

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்