வேங்கை - திரைப்பார்வை

அண்மையில் எதிர்பார்த்து தியேட்டருக்கு போன படங்களில், சொதப்பிய இன்னுமொரு படம்தான் வேங்கை. இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளிவந்தமையால் பலத்த ஆர்வம் இருந்தது. ஹரியின் கடைசி படமான சிங்கத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஒரு நல்ல படம் கொடுப்பார் என்ற எதிர்பாப்பை குலைத்து விட்டது வேங்கை. பாவம் ”மாப்பிள்ளை” என்ற அலுப்பு படத்தின் பின் எதிர்பாத்திருந்த தனுஷையும் இது ஏமாற்றிவிடும் போல தெரிகிறது.


அருவாள்  செயின் கத்தி கம்பு வெட்டு குத்து போன்றவற்றி்க்கு பெயர் போன இயக்குனர்தான் ஹரி. ஆனாலும் இவ்வாறான அம்சங்கள் இவரின் படங்களில் நிச்சயமாக வந்தாலும் படத்தில் இவர் கையாளும் வேகம் சுவாரஸ்யம் அதிரடி காரணமாக இவரின் பெரும்பாலான படங்கள் சொதப்பாது நல்லாகவே இருக்கும். ஏன் அண்மையில் வெளிவந்த சிங்கம் படமும் மேல் சொன்ன பாணியில் வந்து மிகமிக வேகமான திரைகதை ஓட்டத்தின் காரணமாக பெரும்பாலானவர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. (பெண்கள் வயது முதிந்தவர்களை மிகவும் கவரவில்லை என்பது உண்மையானது)



எனவே வேங்கையும் அதே பாணியில்தான் வரும் என்பது படம் பாக்க போன எந்த பயபுள்ளைக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் 2 1/2 மணி நேரமும் சலிப்பாக இருக்காதென்ற உத்தரவாதம் ஹரி என்ற பெயருக்கு இருந்திருந்தது. முதல் அரைவாசியில் பெரும்பகுதி வெறும் இழுவை + கஞ்சா கறுப்பின் விசர் காமடி + தமன்னா தனுஷ் இடையே வழமையான தமிழ்சினிமா பாணியிலான காட்சிகளுடன் சென்று இடைவேளைக்கு சற்று முன்னர் நல்ல வேகத்துடன் ஆரம்பிக்க தொடங்குகிறது.  பின்னர் அந்த வேகம் எதிர்பார்ப்பை திருப்தி செய்யாம அங்க இங்கயெண்டு நேர்த்தியற்ற திரைக்கதையால் திசை திருப்பப்பட்டு எங்க போனதெண்டு தெரியாம மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. வீணாக தமன்னாவின் கதையில் டுவிஸ்டு வைக்கிறம் எண்டு புகுத்தப்பட்ட கதை படத்துடன் ஒட்டவில்லை. மாறாக படத்தின் யதார்த்த தன்மையை முற்றிலும் குலைக்கின்றது.


பஸ்ஸில போகேக்க காணுற பொண்ணுக்கு பின்னால போய் தனுஷ் காதலிக்க முயல்வது வழமையான தமிழ் சினிமா. அதுல அதுக்கு ஒரு பிளாஸ்பக். சலிக்க வைக்கிறது. தனுசிற்கு இந்த மாதிரியான முழுமையான ஆக்சன் ஹீரோ சப்ஜெக்ட் பெரிசா ஒத்து வரும்போல தோன்றவில்லை. சில ஆக்ரோசமாக வரவேண்டிய காட்சிகளிலும் மென்மையாக பேசுகிறார். மற்றும்படி வழமைபோல சேவ் செய்யாத அரும்பல் தாடி அதே நடை உடை பாவனையுடன். தமன்னா இடையிடையே சும்மா வந்து போவதால் படத்தில் இருக்கிறார் என்று தெரிகிறார். வடிவேல் இல்லாத ஹரியின் படங்கள் நகைச்சுவையில் தொய்வுதான் என்பதை இந்த படமும் உணர்த்துகிறது. கஞ்சா கறுப்பு கடுமையா கஸ்டப்பட்டு முயன்றாலும் ஒரு சில நகைச்சுவைகளை தவிர மற்றதெல்லாம் பழைய குருடி கதவை திறடி என்கிற கதைதான். 

ராஜ்கிரண் வீரமான வழமைபோல பொறுப்பான அப்பாவாக வந்து போகிறார். பிரகாஸ்ராஜ் கர்ஜிக்கிறார். ஊர்வசி, பறவைமுனியம்மா போன்றோருக்கு கதையில் முக்கியமில்லை என்பதால் போதிய காட்சிகள் இல்லை. ஆனாலும் தனுஷின் தங்கையாக வரும் நடிகை ஸ்றித்திகா ஜொலிக்கிறார் அழகாக தெரிகிறார். இவர் ”மதுரை to தேனி வழி ஆண்டிப்பட்டி” எனும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளாராம்! (ஆனால், இவரை நான் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை அம்மு என்றே பிழையாக அடையாளங்கண்டு முதலில் பதிவிட்டிருந்தேன். அந்த பிழையை சுட்டிகாட்டி உறுதிப்படுத்தி திருத்திய நண்பர் நிராதன் அவர்களுக்கு மிக்க நன்றிகள்).

ஸ்றீத்திகா
படத்தின் இன்னுமொரு பிளஸ் பொயிண்ட் என்றால் அது பாடல்கள்தான். தேவிசிறிபிரசாத்தின் இசையில் பாடல்கள் முதலேயே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆறு, சிங்கம் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது தடவையாக ஹரியின் படத்துக்கு இசையமைக்கும் வாய்பை பெற்றிருக்கிறார் தேவிசிறிபிரசாத். (ஒரே பாணியிலேயே DSP இசையமைப்பதால் இவரை எனக்கு பிடிக்காத போதிலும் இவரின் மன்மதன் அம்பு, வேங்கை பாடல்கள் என்னையும் நன்றாகவே கவர்ந்திருக்கின்றது). படத்தின் திரைக்கதை படத்தை தூக்கிவிடாவிட்டாலும் பாடல்கள் அந்த வேலையை செய்ய முனைத்திருக்கிறது. கார்த்திக்கின் குரலில் ”காலங்காத்தால” பாடல் பலரின் விருப்ப பாடலாக தற்போது மாறியுள்ளது. 

சுருங்ககூறின் இந்தபடம் Typical ஹரியின் அம்சங்கள் இருந்து கொண்டு சொதப்பிவிட்ட ஒரு படம். இளைஞர்களுக்கு சும்மா கடமைக்கு பாக்கலாம் ரகம் சற்று பெரியவர்களுக்கு ”ஆளைவிடுடாசாமி” என்னும் ரகத்திலான படம்.
பாவம் சீறிப்போட்டு அடங்கிவிட்டது இந்த வேங்கை.

9 comments:

கந்தசாமி. சொன்னது…

///ஸ்ஸில போகேக்க காணுற பொண்ணுக்கு பின்னால போய் தனுஷ் காதலிக்க முயல்வது வழமையான தமிழ் சினிமா. அதுல அதுக்கு ஒரு பிளாஸ்பக். சலிக்க வைக்கிறது.// அரைத்த மாவையே திரும்ப திரும்ப அரைக்கிறார்கள் போல ...)))

மதுரன் சொன்னது…

இந்த மாதம் எதிர்பார்த்தவர்கள் எல்லாம் சொதப்புகிறார்களே!
பாலாவும் சொதப்பினார், ஹரியும் சொதப்பிவிட்டார்

யோ வொய்ஸ் (யோகா) சொன்னது…

i never a fan of hari, he's an ordinary typical commercial director..

எப்பூடி.. சொன்னது…

இன்னுமொரு சாமியை ஹரியே நினைத்தாலும் கொடுக்க முடியாது, ஆனால் ஹரியால் சிங்கம், தாமிரபரணி போன்ற படங்களை கொடுக்க முடியும். அதற்க்கு அவருக்கு ஒரு படத்திற்கும் அடுத்த படத்திர்க்குமான இடைவெளி நிச்சயம் வேண்டும், ஏதோ பதிவெளுதுவதுபோல , ஒருபடம் முடிந்த உடனேயே அடுத்த படத்திற்கு கிளம்புகிறார், நேரத்தை எடுத்துக்கொள்ளாமல் அவசர அவசரமாக இயக்கினால் அப்பப்போ ஆறு, அருள், சேவல், வேங்கை போன்ற திரைப்படங்களை ஹரி தவிர்க்க முடியாது, தனுசிற்கு ஏன் இந்த மாப்பிள்ளை, வேங்கை எல்லாம்??? தனுசிடம் யாருமே இம்மாதிரிப் படங்களை எதிர்பார்ப்பதில்லை!!!!

நீங்கள் குறிப்பிட்ட அம்மு (தொலைக்காசி நடிகை) பாலச்சந்தரின் சஹானவிலும் ஒரு கலக்கு கலக்கியவர், சிறந்த குணச்சித்திர நடிகை.

மருதமூரான். சொன்னது…

நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். நேற்று தெகிவளையைக் கடக்கும் போது வேங்கை பார்க்கும் எண்ணம் வந்து போனது. படம் பார்க்க இறங்கி 350 ரூபா கொடுத்து பல்கனியில் உட்கார்ந்து அரிவாள் வெட்டு வாங்காமல் தப்பித்தேன்!

Anuthinan S சொன்னது…

நீங்கள் ஒரு சமூக சேவகன் ஐயா!!! பாருங்கள் எப்படி உண்மையை சொல்லி எங்களை எல்லாம் பிழைக்க வைத்து இருக்கீங்க என்று!!!

கார்த்தி சொன்னது…

ஆமாம் கந்தசாமி சில காட்சிக்ள் எல்லா படத்திலும் ஒரே மாதிரி வரேக்க கடுப்புதான் வருது!!

ஆமாம் மதுரன் ஆன தெய்வதிருமகள் சறுக்காது எண்டு நினைக்கிறன்!

யோ வொய்ஸ் (யோகா) அண்ணா ஓம் இவரின் காமெர்சியல் சாயமும் அருவாள் வெட்டுக்களும் சிலருக்கு பிடிப்பதில்லைதான்.

எப்பூடி ஜீவ் அண்ணா! மிகசரியான கருத்து! இந்த படங்கள் வரிசையில் பலருக்கு பிடிக்காத சேவல் எனக்கு பிடித்திருந்தது. தனுசிற்கு சும்மா ஓவர்பில்டப்பில்லாத வெட்டி இளைஞர் கதாபாத்திரமே மிகபொருத்தம் அவையே வெற்றி பெற்றிருக்கின்றன.
ஆம் அம்மு சிறந்த குணச்சித்திர நடிகை மட்டுமல்ல அழகான நடிகையும் கூட.

மருதமூரான் ஏன் பல்கனியில் இருந்து மட்டும்தான் பாக்கிறீங்க? ODC - 235/=தானே?

நன்றி அனுதினன்!

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ,

வித்தியாசமான ஓர் விமர்சனத்தை உங்கள் மூலம் படித்தேன். வலையில் வந்த விமர்சனங்களில் சில வேங்கை அருமை என்றிருக்க, நீங்கள் மட்டும் நடு நிலமையுடன் விமர்சனத்தை தந்திருக்கிறீங்க.

ஹரி படம் என்பதால் பார்க்க வேண்டும் எனும் ஆவல் இருக்கிறது. ஆனாலும் அந்த ஆவலை உங்கள் விமர்சனம்...படம் பற்றிய முழுமையான பார்வையினைத் தந்து ஒரு சிறு தொகைப் பணத்தினைச் சேமிக்க உதவியிருக்கிறது.

நன்றி மச்சி.

LOSHAN சொன்னது…

அட அட same blood

நான் முன்பே குழுமத்தில் உங்கள் இந்தப் பதிவு இணைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருந்தாலும் அப்போது படம் பார்த்திருக்கவில்லை; எனவே வாசிக்கவில்லை.

இப்பொது உங்கள் பின்னூட்டம் கண்டு ஞாபகம் வந்தது.

ஒரே மாதிரியான எண்ணவோட்டம்..
பிடிக்காதவை எல்லாம் ஒரே விஷயங்கள் :)

யாம் பெற்ற இன்பம் :)

ஸ்ரித்திக்கா பற்றி சொன்னதுக்கு நன்றிகள் :)

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது புகைப்படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

hit counter

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்