விட்டுச்சென்ற நாய்க்குட்டி-சுட்டது

எனது அண்ணன் நிருத்தியுடம் இருந்து சுட்ட 2வது கவிதை இது. அவரிடம் சுட்ட 1வது கவிதைக்கு இங்கே கிளிக்கவும்! அவரின் அனுமதியுடன் இங்கே மீள் பிரசுரிக்கிறேன். நாய்க்குட்டியை மனதில் வைத்தே இது எழுதப்பட்டுள்ளது. யாவும் முற்றிலும் கற்பனையே. யாருடைய நடைமுறை வாழ்க்கையுடன் (விண்ணைத்தாண்டி வருவாயா ???, அதே நேரம் அதே இடம்?) ஒத்துப்போனால் அது தற்செயலானதே! 

அழகிய கொஞ்சல்கள், செல்ல விளையாட்டுக்கள்
அடுக்கிக்கொண்டே போகலாம்-அது கொஞ்சமல்ல
பசுமையாக இன்னும் கண் முன்னே....
பட்டத்து முடிசூடா பேரரசனுக்கு
பஞ்சுப்படுக்கையும், ஊட்டிவிட்ட சாப்பாடும்
அன்பு, பாசம் அள்ளி ருசித்தது கூட இன்னும் மறக்கவில்லை
இப்போ மட்டும் எல்லாம் கசந்து விட்டதாக்கும்????














தூரத்தே மீன் வாடை இழுத்துவிட்டதா?
கட்சித்தாவல் மசோதா சட்டசபையில் நிறைவேறியது
சட்ட சாட்சியாகிவிட்டது இப்போது
கனவில் கூட வலிக்குதடா ரணமாய்....
கவ்வி காவு கொண்டது சீவனயெல்லோ!!
ஊள்ளிருந்த நான் தெரிய நியாயமில்லைதான்-அதற்காக
உடனிருந்து செய்தது நியாயமென்றாகி விடாதுதானே....


உணர்ச்சிகளெதுவும் இல்லையென்றாகிய பின்
நாதியற்ற இந்த உடைகள் கனக்கிறது எனக்கு
அதனால்தான் என்னமோ இப்போதெல்லாம் நிர்வாணம்தான்
தனிமை இனிக்கிறது; அமைதி அழைக்கிறது
மனச்சமாதானங்களெல்லாம் சருகுகளாய் காற்றில் பறந்துவிட
கழித்து விடப்பட்ட பண்டமாய் ஓர் மூலையில்
மரங்கள் கூட என்னைப்பார்த்து இரத்தக்கண்ணீருடன்














பாலும் மீனும் ஊட்டியது உண்மை ஆனால்
பாற்கடல், சமுத்திரம் எதிர்பார்த்தது யார் தவறு?
ஏற்ற எஜமான் நான் அல்ல என்று புரிந்துவிட்டது போலும்
அதற்கு ஏதும் புரிந்ததோ இல்லையோ,
எனக்கு ஒன்று நன்றாக புரிந்துவிட்டது
இப்போதெல்லாம் நாய்கள் கூட ஒருநாள் நன்றி மறந்துவிடுகிறதென.......

பிற்குறிப்பு: மொறட்டுவை பல்கலைகழக தமிழ்மாணவர்களால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சங்கமம் சஞ்சிகையில் 2008ல் வெளியான ஆக்கம் இது. 

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்