என்ன ஆக்களப்பா? + திரையிசை தகவல்கள்

மிக நீண்ட இடைவேளையின் பின்னர் மீண்டும் ஒரு சிறிய Refresh எனது வலைப்பக்கத்திற்கு. நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டு இருந்ததை சொல்ல இன்றுதான் நேரம் கிடைக்கிறது.


கடந்த வாரங்களில் சந்து பொந்து எங்கும் மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்ட, பேசப்பட்ட விடயம் எல்லோருக்கும் தெரிந்ததே. அது ஒரு கேவலங்கெட்ட விசயமாக இருந்தாலும் கூட அதையொட்டி நடந்த சம்பவங்கள் பல மோசமான எடுத்துக்காட்டுக்களை எம்மத்தியில் விதைத்து சென்றுவிட்டது.

ஒரு ஊடக நிறுவனம் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அந்த விதிமுறைகளையெல்லாம் கடந்து , அதுவும் செய்தி அறிக்கையில் ஒரு விவரணப்பட(Documentary Film) பாணியில், ஒரு பலான படத்தை தந்து இருந்தார்கள் சண்குழுமம். இதற்குள் ஒவ்வோர் காட்சியையும் விளங்கப்படுத்துகிறார் , பின்னணியில் குரல் கொடுப்பவர். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில்கூட காட்டமுடியாத கேவலமான காட்சியை பகிரங்கப்படுத்தியிருந்தனர். SUN TV NETWORKSற்கு ஏற்களவே பல சனல்கள் இருந்தாலும் புதுசா ”SUN ஜல்ஸா” எண்டு ஒரு சனலை தொடங்கி இதை மாதிரி அட்டு படங்களை தொடர்ச்சியாக ஓட்டலாம். நல்ல கிராக்கி இருக்கும் எதிர்காலத்தில். உண்டையை வெளிக்கொணர்கிறோம் என்று சொல்லி  இவர்கள் காட்டிய கூத்துக்கு தண்டனை இல்லையா? திரைப்படங்களுக்கு மட்டும்தான் தணிக்கைகளும் கத்தரிப்புகளுமா??
என்ன நடக்குதெண்டு கூட தெரியாமால் பார்த்த வட்டுக்கள் எத்தனை?


இவ்வாறான போலிச்சாமிகளுக்கு எதிர்ப்பானவர்களுக்கு இந்த செய்தி மிட்டாய் சாப்பிட்டமாதிரி. ஒவ்வொருவராக வாற போற (நல்லவர்களையும் ?) ஆக்களையெல்லாம் போட்டு தாக்கினார்கள். Facebook ல வேற Statusகள் Groupகள் என ஏராளம் ஏராளம். இவ்வாறான (ஆ)சாமிகளுக்கு நான் ஆதரவோ எதிர்ப்போ இல்லை. இவர்கள் எல்லோரும்  தாங்கள்தான் கடவுள் என்று சொன்னதும் இல்லை. எங்கள் வழியைதான் பின்பற்று என்று எனக்கு தெரிந்தவரை வற்புறுத்தியதும் இல்லை. அவ்வாறு இருக்க பிறகு எவ்வாறு அவர்களை மட்டும் குறை கூறுவது.

அவர் கூறிய வசனம் ஒன்று உங்களுக்காக.
”I am not here to prove I am God. I am here to prove YOU are God!”

ஏன் விஜயின் பல படங்களுக்கு நம்பி போய் ஏமாந்தது இல்லையா? இவ்வளவு காலமும் வாழ்க்கைக்கு அவசியமான விடயங்களை அவர்கள் சொல்லும் போது மெச்சிய, அவர்களின் வசனங்களை  பயன்படுத்திய உங்களுக்கு அவருடைய ஒரு கிளிப்பை பார்த்ததும் எல்லாம் பிழையாப் போச்சோ? உங்களுக்கு தேவையான விசயத்தை யாராவது கெட்டவர் சொன்னால் எடுத்துக்கொள்ளாமலா விடுவீர்கள்?  அது உங்களுக்கு உதவும் பட்சத்தில். எனக்கு தெரிந்தவரை அந்த குறிப்பிட்ட (ஆ)சாமி சொன்ன பல கருத்துக்கள் வாழ்க்கைக்கு அவசியமானவை. சொன்னவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அலச முற்படாதீர்கள். இத்தனைக்கும் நீங்கள் என்ன இராமர்களா?


அப்படியெனின் என்ஜினியர், டொக்கராவதற்கு எங்களுக்கு A/L படிப்பிக்கும் ஆசிரியர்கள் எல்லாம் அந்த துறைகளிலல்வா இருந்திருக்க வேண்டும்! வாழ்க்கையை சிறப்பாக, நிம்மதியாக வாழ யாரும் வழிகாட்டலாம். யாரெண்டு தேர்ந்தெடுப்பது, யாருடைய கொள்கையை கடைப்பிடிப்பது ஒவ்வொருவரை பொறுத்தது. இவைகளை விரும்பாதவர்கள்  மற்றவர்களை பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை, குறைகூற தேவையில்லை. புகைப்பிடித்தல் தீங்கு எண்டு மாணவர்களுக்கு படிப்பிக்கும் எத்தனை ஆசிரியர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையில் புகைப்பிடிப்பதில்லை? சும்மா எல்லாரும் கதைக்கிறாங்கள் என்பதற்காக ஒண்டும் தெரியாம ஒத்து ஊத கூடாது.

<----------------------------------------------------------------------------------------------------->

A.R.Rahman ன் இசையில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா அல்பத்தில் பாடகராக சிம்புவை A.R.Rahman பயன்படுத்துவார் என்று எண்ணியிருந்தேன் அது நடக்கவில்லை. சிம்புவிற்கு ஒருவிதத்திலும் சம்பந்தமில்லாத "காதல் வைரஸ்" திரைப்படத்தில் ”பைலாமோர் கண்ணாரே” பாடலை பாட வாய்ப்பளித்திருந்தார். ஆனால் ஏனொ இப்படத்தில் கொடுக்கவில்லை. 
இவ் அல்பத்தில் அடுத்த புதினம்  காதலர் தினத்தில் தான் அறிமுகப்படுத்திய தேவனிற்கு, நீண்ட கால(10ஆண்டு) இடைவெளியின் பின்னர் சுப்பாஹிட் பாடல் ”அன்பில் அவன்” பாடும் சந்தர்ப்பத்தை கொடுத்திருந்தார்.  


தமிழில் NEW படத்தின்பின் தனது இசையில் இரண்டாவது வாய்ப்பை பாடகர் விஜய் பிரகாசுக்கு ரகுமான் Hossanna பாடல் மூலமாக வழங்கினார். தமிழிற்கு பாடகராக விஜய் பிரகாசை அறிமுகப்படுத்தயவர் யார் தெரியுமா? இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா. 2003ஆண்டு ரகசியமாய் படம் மூலம்.

 யுவன்சங்கர்ராஜாவின் இசையில் வெளிவந்த "பையா" படப்பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தாலும் இதே காலத்தில் வெளிவந்த "விண்ணைத்தாண்டி வருவாயா" பாடல்களால் இதன் மவுசு சற்று மங்கியே இருக்கிறது. எனினும் படம் வந்தபின் மக்களால் நிச்சயம் பேசப்படும்.

நாணயம் பட பாடல்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருப்பினும் படத்தின் பின்னணி இசைக்கு சொந்தக்காரர் தமன். இப்படத்தில் வரும் ”காகாகாகக .....” பாடலை இசையமைப்பாளர் தேவிசிறிபிரசாத் இரண்டாவது தடவையாக வேறொரு இசையமைப்பாளரின் இசையில் பாடியுள்ளார்.இதற்கு முன் பத்ரி படத்தில் ரமண கோகுலாவின் இசையில் 3பாடல்களை பாடியமை குறிப்பிடத்தக்கது.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்